Sunday 12 September 2021

அன்புக்கு பாம்பும் அடிமை!

 

அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்! என்பது திருக்குறள்.

தமிழ் நாடு, கோயம்புத்தூரில்  ஒரு பெண்மணி தனது வீட்டிற்குள் புகுந்த ஒரு நாகப்பாம்பை  அன்பொழுகப்  பேசி அந்தப் பாம்பை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்றிருக்கிறார்!  அதுவும், அந்தப் பாம்பும், அந்தத் தாய் சொன்ன சொல்லைக் கேட்டு  வீட்டிலிருந்து வெளியேறிவிட்டது!

அந்தப் பாம்பை  விரட்டினார்,  அடித்து விரட்டினார், துரத்தி அடித்தார்  என்று சொல்ல நமக்கும் மனம் வரவில்லை! அன்பான வார்த்தைக்குக் கட்டுப்பட்ட அந்தப் பாம்பு எந்தத் தீங்கும் செய்யாமல் தானாகவே வெளியேறிவிட்டது!

"என் சாமி! என் தங்கம்! வெளியே போயிடு ராஜா! உன் கோயிலுக்கு வந்து பால் ஊத்துறேன்....!  என செல்லமாகப் பேசி அந்தப் பாம்பை வெளியே அனுப்புகிறார் அந்தப் பெண்மணி! அந்தப் பாம்பு வெளியேறும் போது சில அறிவுரைகளையும் வழங்குகிறார்!  "யாரு கண்ணுலயும் படக்கூடாது! பத்திரமா இருக்கணும் கண்ணு!" என்கிறார்! 

வழக்கமாக நம்மை நோக்கி படம் எடுத்து வரும் பாம்பு அவருடைய அறிவுரையைக் கேட்டதும் அதுவாகவே பின் நோக்கி நகர்ந்து போகிறது!

இது மாயமோ மந்திரமோ என்று ஒன்றுமில்லை! எல்லாம் அன்பு தான்! அன்பு மட்டும் தான்!

அதைத்தான் "அன்புக்கும்  உண்டோ அடைக்கும் தாழ்", "அன்பு இருந்தால் ஆகாதது  ஏதுமில்லை!" என்கிறார்கள்!

அன்புக்கு அனைத்து ஜீவராசிகளும் அடிமை!

No comments:

Post a Comment