Monday 13 September 2021

போக்குவரத்துகள் சீரடைகின்றன!

 இன்று பல பிரச்சனைகளுக்கும் பல தடங்கல்களுக்கும்  போக்குவரத்தே மிகப் பெரிய காரணம் என்பதை  நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம்!

இப்போது நமக்கு நல்ல செய்தி போக்குவரத்து அமைச்சர் மூலம் வந்திருக்கிறது.

ஆமாம் போக்குவரத்துகளுக்கு இனி எந்தத்  தடையும் இல்லை. சுகாதார அமைச்சு கூறியிருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனைத்து நிர்வாகங்களும் செயல்பட்டால் மீண்டும் நாடு பழைய நிலைக்குத் திரும்பும் என்பதில் ஐயமில்லை.

இப்போது பொருள்கள் கிடைப்பதில் நமக்குத் தடங்கல்கள் உண்டு. அதனால் எல்லாப் பொருள்களும் விலை ஏறிவிட்டன. ஒரு சில பொருள்கள் கிடைப்பதே இல்லை. வெளிநாடுகளிலிருந்தும் பொருள்கள் வருவதில் தடைகள். உள்நாட்டிலிருந்து பொருள்கள் ஏற்றுமதியிலும் தடைகள். போக்குவரத்து பிரச்சனைகளினால் அனைத்தும் நிலைகுத்திவிட்டன.

பாதிப்பு ஒரு சாராருக்கு மட்டும் அல்ல.  அனைவருக்கும் தான். ஆனால் போக்குவரத்தைக் காரணம் காட்டி வியாபாரங்கள் நடைபெறவில்லை என்றால் பொதுமக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்! அது தான் நடந்து கொண்டிருக்கிறது.  தட்டுப்பாடுகள் என்பது உணவு பொருள்களுக்கு மட்டும் அல்ல மற்ற துறை சார்ந்த பொருள்களுக்கும் நாட்டில் பஞ்சம் தான்! பாதிக்கப்படுவது பெரும் வியாபாரிகள் மட்டும் அல்ல பாதை ஓரங்களில் வியாபாரங்கள் செய்கிறார்களே அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்!

அதனால் போக்குவரத்து என்பது நாட்டின் முதுகெழும்பு போன்றது. அதனை அலட்சியப் படுத்திவிட முடியாது. அப்படி யாரும் செய்வதுமில்லை. ஆனால் சரியான நேரத்தில் நாம் இந்தப் பெரும் தொற்றினால் அகப்பட்டுக் கொண்ட காரணத்தினால் அனைத்துமே நிலைகுத்திப் போயின!

நாடு இன்னும் கோவிட்-19 தொற்றிலிருந்து விடுபடவில்லை. நாளுக்கு நாள் அதிகரிப்பதைத்தான் பார்க்கிறோம். அதனால் தடுப்பூசி போடுகின்ற வேலையும் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசியை விரைவு படுத்தினால் தான் போக்குவரத்துத் துறையும் தனது செயல்பாட்டினை  அதிகரிக்க முடியும்.

நாட்டில் தொற்று அதிகரித்தாலும் வேறு வழியில்லாமல் எல்லாத் துறைகளுமே செயல்பட ஆரம்பித்து விட்டன. அதேபோல போக்குவரத்துத் துறையும் தனது பணிகளை ஆரம்பித்து விட்டது.

போக்குவரத்து வந்துவிட்டாலே நாட்டின் நிலை சீரடைந்து வருகிறது என்று ஏற்றுக் கொள்ளலாம்!

No comments:

Post a Comment