Thursday 10 December 2020

மலாய் புரியவில்லையா?

 கெடா மாநில மந்திரி பெசார் "இந்தியர்கள்  மலாய் மொழியை முறையாக காற்காதவர்கள்!"  என்று கூறியிருக்கிறார்!

நமக்கும் அது ஆச்சரியமான செய்தி தான்! நாம் மலாய் மொழியைக் கற்பது என்பது எந்த வெளி நாட்டிலும் இல்லை. எல்லாம் உள்ளூரில் தான், மலேசிய பள்ளிக்கூடங்களின் தான்! எல்லா இனத்தவரும் ஒரே விதமான கல்வியைத்தான் பெறுகின்றனர்.

மந்திரி பெசார் முகமட் சனுசி கூட இங்கிலாந்திலோ, அமரிக்காவிலோ மலாய் மொழியைக் கற்றிருப்பார் என்று நாம் நினைக்கவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் இந்தோனேசியாவில் அவர் கல்வி கற்றிருப்பார்.

இந்தோனேசியாவில் தான் அவர் கல்வி கற்றிருப்பார் என்றால் அது நமது குற்றமல்ல. அது அவரின் குற்றம். மலேசியா-இந்தோனேசியவில்  பேசப்படும் மலாய் மொழியில் வார்த்தைகளில், உச்சரிப்பில் ஓரளவு வித்தியாசங்கள் உண்டு.

தன் மேல் குற்றத்தை வைத்துக் கொண்டு இந்நாட்டில் மட்டுமே மலாய் மொழியைக் கற்ற இந்தியர்களைக் குற்றம் சொல்லுவது மிகவும் கண்டிக்கக்தக்கது.

மந்திரி பெசார் நாட்டின் சரித்திரம் அறியாதவரா?  மலாய் மொழியின் தந்தை எனப்படும் முன்ஷி அப்துல்லா யார்? அவர் ஒரு தமிழர். இப்படி மலாய்க்காரர்களுக்கே மலாய் கற்றுக் கொடுத்த தமிழ் இனத்தை "மலாய் அறியாதவர்கள்!" எனக் கூறுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று தான் நாம் சொல்ல வேண்டும்!

மந்திரி பெசார் இந்தியர்களை இழிவு படுத்த வேண்டும் என்னும் நோக்கத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்! அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது!

மந்திரி பெசார் என்பவர் அந்தந்த மாநிலத்தின் தந்தை போன்றவர்.  அனைவருக்கும்,  அனைத்து இனத்துக்கும், தலைவர். ஆனால் கெடா மந்திரி பெசார்  அப்படி நடந்து கொள்ளவில்லை. இந்திய இனத்தை மட்டும் சீண்டிப்பார்க்கிறார்.   தனது பலத்தைக் காட்டி பயமுறுத்துகிறார்

இப்படியெல்லாம் இந்தியர்களைத் தொடார்ந்தாற் போல தொல்லைகள் கொடுத்து ஒடுக்கப் பார்க்கும் ஒரு நிலையை மந்திரி பெசார் உருவாக்கி வருகிறார்!  

இத்தனை ஆண்டுகாலம் எத்தனையோ மந்திரி பெசார்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களால் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. அப்படியே பிரச்சனைகள் இருந்தால் அவைகள் பேசித் தீர்க்கப்பட்டிருக்கின்றன. கொல்லைப்புற வழியாக வந்த இவருக்கு ஓர் இனத்தை இழிவாகப் பார்ப்பதும் பேசுவதும் எங்குக் கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை!

இந்தியர்களுக்கு மலாய் தெரியவில்லை என்பது மலாய் மொழி ஆசிரியர்களைக் கேவலப்படுத்தும் ஒரு செயல். ஆமாம், சரியாகக் கற்றுக் கொடுத்திருந்தால் சரியாகத் தானே பேசுவார்கள்?

எவ்வளவு தூரம் போவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment