Tuesday 22 December 2020

வேண்டாம் பொறாமை!

 என்ன தான் ஒருவன் படித்திருந்தாலும் பொறாமை மட்டும் அவனிடமிருந்து விலகுவதில்லை! இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்று சொல்லுபவர்களுக்கு வேறு என்ன நோக்கம் இருக்கும்? பொறாமையே முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை.

தேசிய மொழிப்பள்ளிகளைப் பற்றி அப்படி என்ன தான் குற்றச்சாட்டு?  அவைகள் இஸ்லாமியப் பள்ளிகளாக மாறி வருகின்றன என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாக சொல்லப்பட்டு வருகின்றன. 

நாட்டில் இஸ்லாமியப் பள்ளிகள் நிறையவே இருக்கின்றன. அதோடு சேர்த்து தனியார் இஸ்லாமியப் பள்ளிகளும் அதிக அளவில் இருக்கின்றன. அந்தப் பள்ளிகளிலும் மாணவர் எணணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்து வருவதாக எந்த செய்தியும் இல்லை!

இப்படி இஸ்லாமியக் கல்வி கற்க வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.  மேலும் அந்தப் பள்ளிகளை நாம் குறைத்தும் மதிப்பிடவில்லை. அவைகளும் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சியும் பெறுகின்றன.

இந்த நிலையில் தேசியப் பள்ளிகளில் ஏன் இந்த இஸ்லாமியப் புகுத்தல் என்பது தான் கேள்வி. இஸ்லாமியர் அல்லாதார் அதிகமாகப் படிக்கும் பள்ளிகள் தான் தேசியப் பள்ளிகள்.  அங்கும் ஏன் இப்படி ஒரு வலுக்காட்டயமான இஸ்லாமியப் புகுத்தல்?

நமக்கு எது தேவை என்பதை நமது ஆட்சியாளர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. இஸ்லாமியக் கல்வி என்பது நன்னெறிக் கல்வி. அது நமக்குத் தேவை. அதனால் தான் தாய் மொழிப் பள்ளிகளில் நன்னெறி என்பது அவரவருக்கு ஏற்ற வகையில் போதிக்க்ப்படுகிறது. 

இந்தக் குற்றச்சாட்டு ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது.  ஆனால் அதற்கான பதில் இது நாள் வரை கிடைக்கவில்லை. அது மட்டும் அல்லாமல் அந்தப் புகுத்தல் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!

தாய் மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று சொல்லுபவர்கள் இந்த கேள்விக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்? இஸ்லாமிய நாடுகளில் கூட இப்படி ஒரு நிலையில்லை. பள்ளிகள், கல்லூரிகள் என்பது எல்லா நாடுகளிலும் உள்ளன.  ஆனால் வெறும் இஸ்லாமியக் கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவாது என்பது எல்லா நாடுகளும் அறியும். 

எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இஸ்லாமியக் கல்வியை புகுத்துவது யாருக்கும் உதவப் போவதில்லை. ஒன்றை நாம் குறிப்பிடலாம்.  இத்தனை ஆண்டுகள், இஸ்லாமியக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததினால் நாட்டில் இலஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டிருக்கிறதா அல்லது வளர்க்கப் பயன்பட்டிருக்கிறதா? இது ஒன்றே போது.  மேலும் விளக்கத் தேவை இல்லை.

தாய் மொழிப்பள்ளிகள் அறிவை வளர்க்கும் கல்விக் கூடங்களாக விளங்குகின்றன. அது ஒன்றே போதும் அதன் வளர்ச்சிக்கு!

மூட வேண்டும் என்று சொல்லுபவர்கள் தாய்மொழிப் பள்ளிகளைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கின்றனர். அதன்  வளர்ச்சி கண்டு பொறாமையால் புழுங்குகின்றனர்.

தேவை இல்லாத பொறாமை! வீண் பொறாமை!

No comments:

Post a Comment