Tuesday 22 December 2020

மாநகர் மன்றத்தை வாழ்த்துகிறோம்!

 இன்று, இந்த கோரானா காலக் கட்டத்தில்,  அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்களே!  அது தான் உண்மை! வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது அதனை யாரும் மறுப்பதிற்கில்லை!

முதலில்,  வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். அதனால் வேலை இல்லை. ஏதோ முன்பு செய்த வேலையின் மூலம் ஒரு வாடகை வீட்டிலிருந்து கொண்டு தங்களது பிழைப்பை நடத்தி வந்தனர்.

குடும்பத்தில் ஒருவர் வேலை செய்தாலும் ஏதோ பிழைப்பு ஓடும். கணவன் மனைவி இருவருக்குமே வேலை இல்லையென்றால் அவர்களால் என்ன செய்ய முடியும்? ஒன்று செய்ய முடியாத நிலையில் வீதிக்குத் தான் வர முடியும்!

"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு!"  என்று சந்நியாசி பாடலாம் ஆனால் குடும்பஸ்தன் அப்படியெல்லாம் பாட முடியாது!

இந்த நிலையின் தான் கோலாலம்பூர் மாநகர் மன்றம் 18  பி40 பிரிவு இந்தியர்கள் மாநகர் மன்றத்தின் வாடகை வீடுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

மலிவான வாடகை என்பதால் அதனை அலட்சியப்படுத்த முடியாது. அதற்கும் முறையான வாடகைக் கட்ட வேண்டும். அதனை முறையாக பராமரிக்க வேண்டும். வசதிகள் குறைவாக இருக்கலாம் ஆனால் தங்குவதற்கு என்று ஒரு கூரை இருக்கிறதே அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவுரையைத் தான் நாம் இந்த மக்களுக்குச் சொல்ல முடியும். இப்போதுள்ள நிலையில் மலிவாக யாரும் வாடகைக்கு வீடுகளைக் கொடுப்பதில்லை.

அதனால் கிடைத்த வீடுகளைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று மட்டும் தான் நாம் சொல்ல முடியும்.

இந்த நேரத்தில் கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா அவர்களைப் பாராட்டுகிறோம்! இந்தியர்களுக்கு நல்லது நடந்தால் அது நல்லது தானே!

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment