Monday 7 December 2020

ஒரு போத்தலா! மூனு போத்தலா?

 கெடா மாநில மந்திரி பெசார் இந்தியர்களைப் பார்த்து நாக்கைப் பிடுங்குவது போல ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்!

"என்னா மச்சி! ஒரு போத்தல உள்ள தள்ளிட்டு மூனு போத்த அடிச்சவன் மாதிரி பேசற! மூனு போத்தல முழுசா பாத்துக்கினியா நீ!" என்று அவர் கேட்டிருக்கிறார்!

அந்த கேள்வி ம.இ.கா. வினரைப் பார்த்துக் கேட்டாலும் அது இந்தியர்களைப் பார்த்துக் கேட்கப்பட்ட கேள்வி தான். 

அவர் கேட்க வருவதெல்லாம் "நீ தண்ணி போட்டுட்டு வந்து கோயில் கோயிலா கட்டுவ! நாங்க பாத்துக்கினு இருக்கனுமா?" என்பது தான் அதன் சுருக்கம்!

உடைப்பட்ட கோவில்களுக்கு நீண்ட கால சரித்திரம் உண்டு. இன்றைய மந்திரி பெசாராக இருப்பவர் ஒரு நீண்ட கால மந்திரி பெசார் இல்லை. சமீப காலத்தில் வந்தவர்.

இவரது ஆட்சியில் உடைப்பட்ட கோவில்கள்,  ஏன்? இத்தனை ஆண்டுகள் மந்திரி பெசாராக இருந்தவர்கள்,  அந்தக் கோவில்களை உடைக்காமல் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கொடுத்தார்கள் என்பதை அவர் கொஞ்சம் ஆராய்ந்திருக்க வேண்டும்.

அந்த கோவில்களைப் பயன்படுத்தியவர்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்கள் இல்லை. அப்படி அந்த வழிபாட்டுத்தலங்கள் தீவிரவாதிகளை உருவாக்கி இருந்தால்  அவைகள் உடைப்பட்டிருப்பதில் நமக்கும் மகிழ்ச்சி தான்.

வழக்கமாக அந்தக் கோவில்களுக்குப் போகும் பக்தர்களினால் நாட்டுக்கு எந்த சேதாரமும் ஏற்பட்டதில்லை.  அவர்கள் ஆயுதங்களையோ, வெடிகுண்டுகளையோ தூக்கவில்லை; தாக்கவில்லை. வெளிநாடுகளுக்குப் போய் துப்பாக்கி ஏந்தவில்லை! ஒன்றுமே இல்லை என்பது தான் பிரச்சனையோ!

நமக்கு ஒரு கேள்வி உண்டு. மந்திரி பெசார் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர். பாஸ் கட்சியின் கொள்கை என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. அந்தக் கட்சியின் சட்டதிட்டங்கள் என்ன, என்ன சொல்லுகிறது,  என்பதும் நமக்குத் தெரியவில்லை. பாஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிற வழிபாட்டுத் தலங்களை இல்லாமல் செய்து விடுவோம் என்று கூட சொல்லலாம்! நமக்குத் தெரியவில்லை. அதைத்தான் அவர் பரிட்சித்துப் பார்க்கிறாரோ?

இப்போதும் நமக்குத் தலை சுற்றுகிறது!  ஒரு போத்தலா! மூனு போத்தலா!

No comments:

Post a Comment