பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகாரன்
சமீபத்தில் நமது நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரபாகரன் பேசிய பேச்சினைக் கேட்டேன்.
அப்போது தான் ஒரு சந்தேகம். பொதுவாக எடுத்துக் கொண்டால் பிரபாகரனைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. இருக்கிறாரா, இல்லையா என்பது கூட தெரிவதில்லை!
மலேசிய அளவில் நமக்குத் தெரியவில்லையே தவிர, ஒரு வேளை, அவரது தொகுதி அளவில் அவர் பிரபலமாக இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை என்பதால் அவரை நம்மால் குறை சொல்ல முடியாது.
மன்னியுங்கள். பாதை மாறுகிறேன்! நான் கேட்ட அந்தப் பேச்சு டிக் டாக்கில் வெளியானது. அந்தப் பேச்சில் அவர் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசியிருந்தார். அதாவது அடையாளக்கார்டு, குடியுரிமை, பிறப்பு சான்றிதழ் போன்ற எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தன்னை அணுகலாம் என்று இந்தியர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்திருந்தார்.
பிரபா, தனது தொகுதி மக்களுக்கு அந்த செய்தியினை விடுத்திருந்தால் நாம் அதனைப்பற்றி கவலைப்பட போவதில்லை. அது அவரது கடமை என்று விட்டிருக்கலாம். ஆனால் பிரச்சனை என்பது அதுவல்ல. அவர் மலேசிய வாழ் இந்தியர்கள் அனவருக்குமே அந்த செய்தியைக் கொடுத்திருந்தார்! அது தான் நமக்கு ஆச்சர்யமாக இருந்தது!
இந்தியர் பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்பதற்காக பலவேறு அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழு அமைத்து, இந்தியர்களின் பிரச்சனைகளைக் களைய, செயல்படப் போவதாக அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. செயல்படத் துவங்கவில்லை என்றாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன.
அதனால் தான் பிரபகாரனைப் பற்றி நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது. அவர் மட்டும் ஏன் தனித்து இயங்கப் பார்க்கிறார் என்கிற சந்தேகம் தான். இந்த நாடாளுமன்ற குழுக்களில் அவர் சேர்ந்து கொள்ளாமல் அவர் கழட்டி விடப்படுகிறாரா, புறக்கணிக்கப்படுகிறாரா என்பது நமக்குத் தெரியவில்லை. அப்படி அவர் புறக்கணிக்கப்பட்டால் நமக்கு அதில் வருத்தம் தான். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து, ஒரு குழு அமைத்து செயல்பட்டால், நமது குரல் இன்னும் பலமாக ஒலிக்கும்.
அப்படி அவர் புறக்கணிக்கப்பட்டால் அவர் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. அவருடைய தொகுதியில் அவரின் தொண்டு நிச்சயம் இன்னும் தேவைப்படும். அது பல்லினத் தொகுதி. அடுத்த ஐந்து ஆண்டுகள் அங்கு அவர் தேவைப்படலாம். மற்றவர்கள் பொதுவாக இந்தியர் பிரச்சனையை அணுகலாம்.
எப்படியோ எது நடந்தாலும் சரி அவரவர் தொகுதியை அவரவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் குழுக்கள் அமைத்து இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இப்போது யார் தடுமாறுகிறார் என்பது தெரியவில்லை! பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
No comments:
Post a Comment