Friday 21 April 2023

கோபம் நம் சத்ரு!

 

கோபம் பற்றி பேச வேண்டுமானால்  ஒரே வார்த்தையில்  "கோபம் நம் சத்ரு!" என்று சொல்லலாம். என்ன வார்த்தையில் நாம் சொன்னாலும் அது சத்ரு தான். நம் எதிரி தான்.

சமீப காலங்களில் கோபத்தினால் வரும் விளைவுகளைப் பார்க்கிறோம். காணொளிகளில் எல்லாமும் பகிரப்படுகின்றன. நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை ஒதுக்கி விடுவோம்.

கோபத்தினால் குடும்பமே அழிகின்றன.  இது நமது அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம். ஆனால் நாம் இங்கே பேசுவது குடும்பங்களைப் பற்றி அல்ல  தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நமது வியாபாரிகளைப் பற்றி. தான் நாம் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சமீபத்தில் ஓர் உணவகத்தில் தகராறு. வெளியிலிருந்து வந்த இரண்டு பேர் உணவகப் பணியாளர் ஒருவரை தாக்குகிறார்கள். ஏதோ வாய்த் தகராறு  என்று சொல்லவும் முடியவில்லை. அந்த இரண்டு நபர்களும் அந்த அளவுக்குக் கோபப்பட வேண்டிய அவசியமுமில்லை. உணவகத்திற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். எல்லாவற்ரையும் விட பெரிய பாதிப்பு என்றால்  உணவகத்தில் சண்டைகள் ஏற்பட்டால் அஙுகு மக்கள் போவதை விரும்ப மாட்டார்கள். அதனால் பணியாளர்கள் கொஞ்சம் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துத் தான்  போக வேண்டிய சூழல். 

இன்னொரு பக்கம் பணியாளரிடையே சண்டை சச்சரவுகள். அது ஒரு மாமாக் உணவகம். ஒரு பாகிஸ்தானியர் ஓர் இந்தியப் பணியாளரை அடித்து விட்டார். அவர்களுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை? ஒன்றுமே இல்லை! அந்தப் பாக்கிஸ்தானியர் அந்த இந்திய பணியாளரை விரும்பவில்லை.  நாட்டுப் பிரச்சனையை வைத்து வெளி நாடுகளில் அடித்துக் கொள்வதை என்னவென்று சொல்வது? எதற்கு இந்த கோபம்? நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கோபம் என்பது தொழில் நிறுவனக்களில் வரவே கூடாது. எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட்டால் நம் நிறுவனங்கள் தான் பாதிக்கப்படும். அதுவும் உணவகங்களில் எப்போதுமே பிரச்சனைகள் உண்டு. வாடிக்கையாளர்களுக்கு எல்லாமே அவசரம் தான். கேட்டதும் கொடுத்துவிட வேண்டும். பணியாளர்களுக்கு அதைக் கேட்டு கேட்டு அலுத்துப் போய்விடும். அப்போது இவர்களும் தங்களது புத்தியைக் காட்டுவார்கள்! எங்கே போய் முட்டிக் கொள்வது? இருந்தாலும் பணியாளர்கள் தான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வேறு வழியில்லை!

கோபம் எல்லாவற்றையும் அழித்துவிடும். வளரவிடாமல் செய்துவிடும். அமரிக்காவில் எத்தனை துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்? பெரியவர்கள் மட்டுமா? பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் யாரையும் இந்தக் கோபம் விட்டுவைப்பதில்லை. ஆசிரியரைச் சுடுகிறார்கள்! மாணவர்களைச் சுடுகிறார்கள்!  யார் என்ன தான் செய்ய முடியும்?  கேட்டால் "கோபம்! காலியாக்கி விட்டேன்!" என்று  பதில் வருகிறது!

கோபம் வேண்டாம் என்பதைத் தவிர வேறு எதையும் சொல்வதற்கில்லை. கோபம் மாபெரும் சத்ரு!

No comments:

Post a Comment