Friday 10 June 2022

பயப்படுவது யார்?

  

Who is afraid  of Election?
தேர்தல் என்றாலே யார் பயப்படுபவர்களாக இருக்க முடியும்? அது பெரும்பாலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாகத்தான் இருக்க வேண்டும்! எல்லாத்  தேர்தல்களிலும் இது தான் நடக்கும்.

ஆனால் நம் ஊர் தேர்தல் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக  இருக்கிறது. இத்தனை ஆண்டுகள்  அம்னோவினர் ஆட்சியில் இருந்த போது ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் நடந்து வந்திருக்கிறது.

இந்த ஆண்டு அதே அம்னோ, பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் போது, ஏனோ இப்போதே,  நான்காவது ஆண்டு நடந்து கொண்டிருக்கும் போதே, தேர்தலை நடத்த வேண்டும் என்று இன்றைய மலேசிய பிரதமர்க்கு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது! இன்னும் ஓர் ஆண்டு இருக்கிறதே என்று சொன்னால் "இல்லை! இல்லை! இப்போதே நடத்த வேண்டும்!" என்று  சண்டித்தம் பண்ணிக் கொண்டிருக்கிறனர் அம்னோ தரப்பினர். 

இவர்கள் கேட்கும் போதெல்லாம் பொதுத்தேர்தல் நடத்த வேண்டுமென்றால்  இதில் எந்த நீதியும் நேர்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.   ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் என்பது தான் எழுதப்பட்ட சட்டம். இந்த நாடு சுதந்திரம் பெற்ற தேதியிலிருந்து இன்றுவரை அந்த சட்டத்தைத் தான் நாம் பின்பற்றுகிறோம்.

அம்னோ  தேவையில்லாத  அரசியல் நெருக்கடியை  நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  அம்னோ மக்களைப்பற்றி யோசிப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அரசாங்கத்தைக் கைப்பற்ற வேண்டும். அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். தங்கள் கட்சி சார்ந்த,  நாட்டையே சூரையாடிய கொள்ளையர்களைக் காப்பாற்ற வேண்டும். இது தான் அவர்கள் கொண்டுள்ள உன்னத நோக்கம்!

தேர்தல் முன்கூட்டியே வைப்பதற்கு அம்னோவுக்கு மேற்சொன்னவைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் மற்ற கட்சிகள் யாரும் தேர்தல் பற்றி  அக்கறைக் காட்டவில்லை. இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் போது இப்போது தேர்தல் வையுங்கள் என்கிற விவாதம் தேவை இல்லை என்பது தான் அவர்களின் நிலை.

நாட்டில் விலைவாசிகள் தாறுமாறாக ஏறிப்போய் கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் யாருக்கு வேண்டும் தேர்தல்?  அம்னோவில் உள்ளவர்கள் பணக்காரர்கள். அவர்களுக்கு விலைவாசி பற்றிக் கவலையில்லை. அப்படியே விலையேறினாலும் அம்னோ அவர்களைக் காப்பாற்றிவிடும்! 

நாட்டின் நிலைமையைப் பாருங்கள். ஒரு சராசரி தர்பூசிணி பழம் சுமார் நாற்பது வேள்ளி! ஒரு கிலோ நெத்திலி எண்பது வெள்ளி! இது சும்மா ஒர் எடுத்துக்காட்டு! அவ்வளவுதான்! இன்னும் ஆழமாக உள்ளே போகவில்லை!

இந்த நிலையில் பொதுத்தேர்தல்  தேவையா என்பது தான் பொது மக்களின் கேள்வி.  இப்போது, உடனடி அரசாங்கத்தில் வேலை என்பது விலைவாசிகளைக் குறைப்பது தான். மற்றவை பின்னர்!

அடுத்த ஆண்டு தேர்தல் என்றால் திப்போதே பயப்படுவர்கள்  அம்னோ! அம்னோ! அம்னோ! 

No comments:

Post a Comment