Friday, 17 June 2022

SPM தமிழ் மொழி

 

இந்த ஆண்டு SPM தமிழ் மொழி பாடத்தில் நமது மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என் அறியும் போது நமக்கும் பெருமிதமாக இருக்கிறது! முதலில் இந்த மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

இந்த ஆண்டு மிகவும் முக்கியமான விஷயமாக நாம் கருதுவது தமிழ் மொழிப்பாடம் எடுத்த மாணவர்கள் சுமார் பத்தாயிரம். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கைக்  கூடும் என நம்புகிறோம்.

அதே போல தமிழ் மொழி இலக்கியம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரம் என்பதை   ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் எடுத்த மாணவர்களை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.  இந்தப் பாடத்தைக் கஷ்டப்பட்டு ஏன் படிக்க வேண்டும் என்கிற மனநிலையில்  தான் மாணவர்கள் இருக்கிறார்கள். அதனால் பலனில்லையே! அது தான் மாணவர்களின் சோர்வுக்குக் காரணம்.  

எப்படி இருந்தாலும் தமிழ் மொழிப்பாடம் அல்லது தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களை SPM  தேர்வில் எடுக்க பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். இன்னும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இந்தப் பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தான் பெரும்பாலும் தமிழ் மொழித் தேர்வுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களே இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் காட்டினால் இன்னும் சிறப்பு.

இந்த நேரத்தில் தமிழ் மொழி கற்றுத்தரும் ஆசிரியர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அவர்களின் ஊக்குவிப்பு இல்லையென்றால் நாம் எதிர்பார்க்கின்ற பலன் கிடைக்காது. 

அதே போல நமது நாளிதழ்களும் மாணவர்களுக்கான வழிகாட்டிகளைப் பல வழிகளில் கொண்டு வருகின்றன.  அதே போல வழிகாட்டிப் புத்தகங்களும் வெளியாகின்றன. மாணவர்களுக்கு எந்த அளவு உதவ முடியுமோ அந்த அளவுக்குப் பலர் பல வழிகளில் உதவுகின்றனர். மாணவர்களுக்குக்  கருத்தரங்குகளும் பலவாறாக நட்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

நாம் இங்கு சொல்ல வருவது தமிழ் மொழிப்பாடம் மட்டும் அல்ல, தமிழ் மொழி இலக்கிய மட்டும் அல்ல, மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் முதன்மை நிலையில் தேர்ச்சி பெற வேண்டும். நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல தேர்ச்சி பெற்று பேர் பெற்றுத்தர வேண்டும்.

தமிழ் மொழி பாடங்களை எடுத்த அனைத்து மாணவர்களுக்கும் நமது வாழ்த்துகளும் நன்றிகளும்!

No comments:

Post a Comment