Wednesday 2 August 2023

கேள்வியின் நாயகனே...!

 


மாணவர் ஒருவர் குவந்தான் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் பதிய சென்ற போது நடந்த நிகழ்வு இது!

குறிப்பிட்ட அந்த மாணவர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்திருக்கிறார். பயணம் செய்யும் வழியில் ஓய்வு எடுக்கும் பகுதியில் ஓய்வு எடுத்துவிட்டு  மீண்டும் கார் பயணம் ஆரம்பமாகிவிட்டது.

கார் சிறிது தூரம் சென்ற பிறகு தான்   காரில் மகனைக் காணோமே என்று  தாயாருக்குத் தெரிய வந்து காரை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். அப்போது தான் மகனை  ஓய்வு எடுக்கும் தலத்திலேயே விட்டுவிட்டு வந்தது  குடும்பத்தினருக்கு ஞாபகத்திற்கு வந்தது!

அதன் பின்னர் அந்த மாணவர் ஒயவு தலத்தில் இருந்த வேறொரு பயணியின்  உதவியோடு அவரது குடும்பத்தினரோடு வந்து சேர்ந்து கொண்டார்.  எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

பொறுப்பில்லாத மாணவராக இருக்கக் கூடுமோ  என்று நிலைத்தாலும்  ஒன்று மட்டும் நிச்சயம். எல்லாம் பதட்டம், பதட்டம், பதட்டம் தான்!  பழக்கம் இல்லாத புதிய கல்லூரிக்குச் செல்லும் போது, புதிய மாணவர்கள், புதிய சூழல்,  அனைத்தும் புதிய, புதிய, புதிய - எல்லாமே புதியது! அதனால் மாணவனுக்கும் நம்பிக்கை வரவில்லை.

ஆனால் அவனது குடும்பத்தினர் மீது தான் நாம் குற்றம் சொல்ல வேண்டும். பெரியவர்கள். அனுபவம் உள்ளவர்கள். பெரியவர்கள் தான் அவனுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். புதிய இடத்திற்குப் போகிறோமே  என்கிற பயம் அவனுக்கு இருக்கத்தான் செய்யும். முதல் நாளே அவனுக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருப்பது  வேதனையான விஷயம்.

எல்லாமே நல்லபடியாக முடிந்தது என்பது நல்ல விஷயம் தான். அவனும் இந்த  நிகழ்வை மறந்து நல்லபடியாக அவனது கல்வியைத் தொடர  நாம் இறைவனை வேண்டுகிறோம்!

No comments:

Post a Comment