Friday 4 August 2023

யார் தந்தார் இந்த அரியாசனம்?

 

       நன்றி: வணக்கம் மலேசியா

பல்கலைக்கழகங்களில்  ஒரு மாணவர் என்ன பாடம் எடுத்துப்படிக்க வேண்டும் என்பது மாணவர்களின் ஆர்வத்திற்கு உட்பட்டது.

மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடங்களைப் படிக்கும் போது தான் அவர்கள் விரும்பிய துறையில் அவர்களால் அவர்களது திறமையைக் காட்ட முடியும். இது தான் நடைமுறை.

ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையைப் பாருங்கள். அவர் மருத்துவம் படிக்க கேட்கவில்லை. எஞ்சினியரிங் படிக்க கேட்கவில்லை.  சட்டத்துறையை  விரும்பவில்லை. ஏனென்றால் நமது மலேசிய பல்கலைக்கழகங்களில்  இந்திய மாணவர்களுக்கு  முன்னுரிமைக் கொடுத்தால் இந்த மூன்று பாடங்களுக்குத் தான் அவர்கள் விண்ணப்பம் செய்வார்கள்!  அதனால் தான் நமது மாணவர்கள் இந்தத் துறையிலிருந்து  தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்! இடம் எதிர்பார்த்த  அளவிற்குக் கிடைப்பதில்லை; ஒதுக்கப்படுவதில்லை!

ஆனால் இந்த மாணவி,  பிரியநங்கை மகேந்திரன்,  கேட்பதெல்லாம் ஆசிரியர் சார்ந்த கல்வி தான். இத்தனைக்கும் பல்கலைக்கழகம் கேட்பதைவிட இவருடைய தகுதி அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை!  இதுவரை அவர்கள் இடம் கொடுத்திருக்கும்  மாணவர்களின் தகுதியைப் பார்த்தால் அவர்கள் அனைவருமே இவருடைய  தகுதிக்கு இணையாக இருக்க மாட்டார்கள். ஆனாலும் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இப்போது நமது கேள்வியெல்லாம் கல்வி அமைச்சு யார் என்ன படிக்க வேண்டும் என்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது சரியான முறையா என்பது தான் கேள்வி.   மாணவர்கள் விரும்பாத துறையை அவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அதைக்கூட மன்னித்து விடலாம். ஆனால் அவர்கள் கேட்காத துறையை, விரும்பாத துறையை அவர்களின் மீது திணிக்கிறார்கள்! அது தான் கொடுமை!  கோட்டாவை நிரப்ப வேண்டும் என்பதற்காக தகுதி இல்லாதவர்களையெல்லாம் மருத்துவராக்கி விடுகிறார்கள்! அப்படியென்றால் தகுதி உள்ளவர்களுக்காவது  கோட்டா முறையில் கொடுத்தாலாவது தகுதி உள்ளவர்கள் மருத்துவம் பயில இயலும். அதுவும் கொடுப்பதில்லை!

சரி இந்த மாணவி ஆசிரியாரவதற்குத் தானே விண்ணப்பம் செய்கிறார்? அதிலென்ன பிரச்சனை/ இந்திய மாணவர்கள் எந்தத் துறைக்கு விண்ணப்பம் செய்தாலும் அந்தத் துறையைக் கொடுக்கக் கூடாது  என்கிற விரோதப் போக்கைத்  தான் கல்வி அமைச்சு கடைப்பிடிக்கிறதோ என்றே தோன்றுகிறது!   மாணவர்கள் அவர்களின் பெற்றிருக்கும் மதிப்பெண்கள்  அடிப்படையில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும்.  கல்வி அமைச்சு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்திய சமுதாயம் வலியுறுத்துகிறது.

இந்திய மாணவர்களை ஏமாற்றும் போக்கை கல்வி அமைச்சு மாற்றிக்கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment