Thursday 24 August 2023

காரில் குழந்தைகளைப் பூட்டி வைக்காதீர்கள்!

 

காரில் குழந்தைகளைப் பூட்டி வைக்காதீர்கள் என்று என்ன தான் காவல்துறை சொன்னாலும் அதைக் கேட்கத்தான் நாதியில்லை!

இன்றைய இளம் பெற்றோர்கள் வழக்கம் போல அலட்சியமாகத்தான் இருக்கின்றனர். குழந்தைகளை இப்படி தாங்க முடியாத உஷ்ணத்தில் அவர்களை இப்படியெல்லாம்  காரில் போட்டுவிட்டுப் பூட்டி விட்டுப் போவது அந்த குழந்தைக்கு எத்தைகைய ஆபத்தை  விளைவிக்கும்  என்று தெரியாமலா இருக்கும்?  ஆமாம், தெரியும் ஆனால் தெரியாது!

இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் தெரிந்து தான் செய்திருக்கின்றனர். காரின் கண்ணாடி சிறிதளவு மேலே திறந்து வைத்து விட்டுத்தான் போயிருக்கிறார்கள்.  ஆனால் இருக்கின்ற வெய்யிலில் இதெல்லாம் போதுமா?  குளிரூட்டி இல்லாமல் பெற்றோர்களால் இருக்க முடியாது. காரில் உட்கார்ந்ததும்  உடனே 'ஏர்கோன்'  இல்லாவிட்டால் உயிர் போய் விடும். ஏர்கோன் இல்லாமல் தங்களால் இருக்க முடியாது என்பது பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்கிறது.  ஆனால் ஒரு குழந்தை பூட்டிய காரில், வெளுத்து வாங்கும் வெய்யிலும், எப்படி அடைந்து கிடக்கும்  என்பது தெரியுமா, தெரியுதா?

குழந்தை, தாங்க முடியாத அந்த சூட்டில் சோர்ந்து போன நிலையில்  காரின் கதவை உடைத்து, அழுது கொண்டிருந்த   அவனை வெளியே கொண்டுவர நேர்ந்திருக்கிறது. நம்மால் இந்தப் பெற்றோர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படி இப்படியெல்லாம் அலட்சியமாக இருக்க முடிகிறது?

இது போன்ற சம்பவங்கள் நம் நாட்டில் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சில குழந்தைகள் இறந்தும் போயிருக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் அதனை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வதில்லை. எல்லாமே அலட்சியம் தான். கையில் கைப்பேசியைக் கொடுத்துவிட்டால் போதும். குழந்தைகள் உலகை மறந்து விடுகிறார்கள்! ஆனால் எவ்வளவு நேரம்? உஷ்ணம் தாங்க முடியவில்லை. மூச்சு விடுவதில் சிரமம். அவர்களால் என்ன செய்ய முடியும்?

இப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்று எத்தனை முறை  எச்சரிக்கை விட்டாலும்  அது என்னவோ தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

தயவு செய்து குழந்தைகளை இப்படியெல்லாம் சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்பது தான் நமது செய்தி.

No comments:

Post a Comment