ஜனநாயக செயல் கட்சி தடம் மாறுகிறதா என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
இத்தனை ஆண்டுகள் இந்தக் கட்சிக்காக தங்களது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தமிழர்கள் இன்றைய தலைமைத்துவத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று அப்பட்டமாகத் தெரிகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் சீக்கியர் ஒருவரை முழு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் மனிதவள அமைச்சராக தமிழர் ஒருவரை நியமித்திருந்தால் அது ஏற்புடையதாக இருக்கும். ஆனால் ஜ.செ.க. அதனைச் செய்யவில்லை. சீனர் ஒருவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.
ஜ.செ.க. வின் ஆரம்பகாலம் என்பது முற்றிலுமாக - முதன்மையானவர்களாக இருந்தவர்கள் தமிழர்கள். இன்றைய தலைவர்கள் அதனை உணரவில்லை. இது நான்றிகெட்டத்தனம் தான். ஆனால் என்ன செய்வது? அதிகாரம் அவர்கள் கையில். வளமும் அவர்கள் கையில். நம்மை அவர்கள் அலட்சியம் செய்கின்றனர் என்பது புரிகிறது. அது தான் சீனர்களின் வழிவழியாக வரும் குணம். முதலின் அணைப்பது. வளர்ந்த பின் எட்டி உதைப்பது என்பது சீனர்களின் குணம். அது ஒரு கட்சியாக இருந்தாலும் அதைத்தான் அவர்கள் செய்வார்கள்.
இன்னொரு முக்கிய துரோகமும் இந்த மாற்றத்தில் நடந்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் அவர்களை - ஒரு முன்னாள் அமைச்சராக இருந்தவரை - துணை அமைச்சராக இந்த மாற்றத்தில் பதவி இறக்கம் செய்திருப்பது ஜ.செ.க. வின் கேவலமான செயல். ஒரு சீனரை அவர்கள் இப்படி செய்ய முடியுமா? குலசேகரன் இதனை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது தான். அப்படி அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இதோடு அவரைக் காலி செய்து விடுவார்கள். எல்லாம் ஒரு வற்புறுத்தல் என்பதைத் தவிர வேறு என்ன?
ஆமாம் நம்முடைய பலம் என்பது எதிலும் இல்லை. அரசியல் கட்சிகள் வாக்கை வைத்துத்தான் நம்மை எடை போடுகிறார்கள். ஆனால் இது போன்ற நன்றிகெட்டத்தனம் சீனர்களிடம் மட்டும் தான் இருக்கும். அரசியலில் மட்டும் அல்ல. எந்தத் துறையாக இருந்தாலும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.
நாம் சீனர்களிடம் தொங்கிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். அவர்களால் நமது சமூகத்திற்கு எந்த ஒரு நல்லதும் நடக்கப்போவதில்லை. அது அரசியலாக இருந்தாலும் அதே கதிதான்.
மீண்டும் அதே கேள்வி தான். நாடாளுமன்றத்தில் எத்தனையோ ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் அமைச்சராக வருவதற்குத் தகுதி இல்லாதவர்களா என்று நானும் அந்தக் கேள்வியைக் கேட்கிறேன். அப்படி இல்லையென்றால் தகுதியானவர்களைச் செனட்டராக ஆக்கிவிட்டு அமைச்சராகப் போடலாமே?
இனி ஜ.செ.க. வில் உள்ள தமிழர்கள் மூட்டையைக் கட்டலாம்!
No comments:
Post a Comment