Friday 22 December 2023

உணவுகளில் தொடரும் அவலங்கள்!

 

சான்விச் எதற்காக வாங்குகிறோம்.?  ஏதோ ஓர் அவசரத்துக்காக  அல்லது தற்காலிகப் பசியைப் போக்க அல்லது    ருசிக்காக - இப்படிப்  பல காரணங்கள் உண்டு.


ஆனால் ஒரு வயதான பெண்மணி அதனைச் சாப்பிட்ட பின் இறந்து போனார். அதுவும நம் நாட்டடில்.  இறந்து போன பின் யார் என்ன செய்ய முடியும்? அதற்குப் பல்வேறு  காரணங்கள்  இருக்கலாம். ஆனால் போன உயிர் போனது தானே. என்னசெய்ய முடியும்?

இந்த சம்பவம் நடந்தது  திரங்கானு மாநிலத்தில்.  நெடுஞ்சாலை, ஓய்வுப்பகுதியில்  வாங்கப்பட்ட    அந்த சன்விச் ஒரு மாதுவின் உயிரைப் பறித்திருக்கிறது.  அது தான் செய்தி.

இது போன்ற சான்விச் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிம்  சிறுவியாபாரிகள்  கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு.  கெட்டுப்போன அல்லது அதன் நாள் முடிந்த பின்னர் அதனை விற்பனைச் செய்வது என்பது தகாத செயல். அது வாடிக்கையாளர்களுக்குக் கெடுதலை ஏற்படுத்தும்.

ஆனால் நாள் தள்ளிப்போனதை  விற்பனைச் செய்யக்கூடாது என்று  தெரிந்தும், தெரியாதது போல் விற்பனை செய்வது  கண்டிக்கதக்க செயல்.  அதனைச்  சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இப்போது ஒரு பெண்மணி இறந்து போனார் என்பதுசாதாரண விஷயமல்ல.   நஞ்சு கலந்து உணவைச் சாப்பிட்டிருக்கிறார் அதனால் தான் இறந்து போனார்   என்பது  இப்போது அந்தப் பாதையில் பயணம் செய்பவர்கள்  அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  இனி அந்த பாதையில் பயணம் செய்பவர்  யாரும் எந்த உணவுப் பொருளையும்  அந்த ஓய்வுப்பகுதியில்  வாங்கமாட்டர்கள் என நம்பலாம்.

ஒருவர் செய்யும் தவறினால் எல்லா வியாபாரிகளும்  பாதிக்கப்படுகின்றனர்.  இதனை வியாபாரிகள்  புரிந்து கொள்ள வேண்டும்.  அவர்கள் அனைவருமே சிறு வியாபாரிகள். இப்போது தான் வியாரத்துறையில் காலெடுத்து வைத்திருக்கின்றனர்.  ஆரம்பமே அவர்களுக்கு இப்படி ஓர் ஆபத்தா?

வியாபாரம் செய்பவர்கள், எந்த இனத்தவராக இருந்தாலும் சரி,  நாணயம் இருக்க வேண்டும். கெட்டுப்போன உணவுப்பொருள்களை விற்று  பணம் சம்பாதிப்பது கேவலமானது. சும்மா கேவலம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.  சிறைக்குப் போகும் சாத்தியமும் உண்டு.

இது போன்ற அவலங்கள் தொடரக்கூடாது  என்பதே நமது வேண்டுகோள்!


No comments:

Post a Comment