Saturday 9 December 2023

மணி கட்டுவது யார்?

 

        There are no 'pendatang' says Sultan of Selangor,  Sultan Sharafuddin Idris Shah.

சமீபத்திய The Star  நாளிதழுக்கு சிலாங்கூர் ஆட்சியாளர்  சுல்தான் ஷராஃபுடின் இட் ரிஸ் ஷா  அவர்கள் கொடுத்த  நேர்காணலில் நாம் அனைவரும் புரிந்து கொள்ளும்படியான  செய்தியைக் கொடுத்திருக்கிறார்.

'வந்தேறிகள்' என்பதாக யாருமில்லை. அனைவரும் இந்நாட்டு மக்கள் அதிலே எந்த சந்தேகமும் வேண்டாம் என்று  கூறியிருக்கிறார்.  இதனை அரசியல்வாதிகள் தான் அரசியல் காரணங்களுக்காக இதனைப் பெரிது படுத்தி வருகின்றனர். 

இந்த உண்மையைப் பலர் பலமுறை கூறியிருக்கின்றனர். ஆனாலும் அரசியல்வாதிகளுக்கு அப்படி சொல்லுவதில் ஒரு 'கிக்' இருப்பதாகத் தோன்றுகிறது.  அதாவது அசிங்கப்பட்டுப் போன அரசியல்வாதிகளுக்கு அவர்கள் மீண்டும் எழுந்து நிற்க வந்தேறிகள், மதம் இவைகள் தான்  முக்கியத் தூணகளாக விளங்குகின்றன. யார் இதனை மறுப்பார்?

சுல்தான் அவர்கள் சொல்லுவதில் யாருக்கும் எந்த மறுப்பும் இல்லை. ஆனால் அது மீண்டும் மீண்டும் கிளப்பப்படுகிறதே  யார் என்ன செய்ய முடிகிறது?  யாராலும் எதுவும் செய்ய முடியவில்லையே!

நமக்குத் தெரிந்தவரை  வெறும் கண்டிப்பு என்பது மட்டும் போதாது. தண்டனையும் சேர்த்து வரவேண்டும்.  அதுவும் கடும் தண்டனை. இதைப் பேசுபவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள். அவர்கள் தேர்தலில் நிற்பதைத் தடை செய்ய வேண்டும். அவர்கள் ஆயுட் காலம் வரை  தேர்தலில் நிற்க முடியாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால்  போதும். ஒருவனும் அதைபபற்றி பேசவே மாட்டான்!  அது தான் அரசியல்வாதிகளின் குணம்!

அரசியல்வாதிகள் நல்லவர்கள் தான்.  ஆனால் அவர்கள் எதைப்பற்றி பேசினால்  வாக்காளர்களைக் கவர முடியும் என்பது பற்றி தான் அவர்கள்  யோசிப்பார்கள். அதனைப் பேசத் தான் அவர்கள் முயற்சி செய்வார்கள். அது சமயங்களில் அளவை மீறிப் போய் விடுகிறது.

சுல்தான் அவர்களின் இந்த அறிவிப்பை நாம் வரவேற்கிறோம். ஏன்? அரசியல்வாதிகளும்  வரவேற்கத்தான் செய்வார்கள்.  ஆனால் இது பயனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும். இது சிலாங்கூர் மாநிலத்திலாவது  நடக்குமா  என்று பார்ப்போம்.

இது பூனைக்கு மணி கட்டும் பிரச்சனை தான்!  நடக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment