Monday 15 April 2024

தேவையற்ற புறக்கணிப்பு!

பாலஸ்தீனிய - இஸ்ராயல் சண்டை பற்றி நாம் அறிவோம். இஸ்ராயேல்  ஒர் நியாயமற்ற  நாடு என்பது பற்றி இரு வேறு  கருத்துகள் இல்லை.  நீதி நியாயம் எல்லாம்  அவர்களிடம் எடுபடாது!  ஈவு இரக்கமற்ற ஓர்  இனம். சுருக்கமாக  அது போதும்.

ஆனால் அவர்களது தொழில் உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கின்றது.  பெருந்தொழில்களை எடுத்துக் கொண்டாலும் சரி சிறுதொழில்களை எடுத்துக் கொண்டாலும் சரி  அவர்கள் பங்கு இல்லாமல் எதுவும் இல்லை!  ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு பொருளில்  யூதர்களின் பங்கு இருக்கத்தான் செய்யும்.  நமக்கு அடையாளம் தெரியாதே தவிர அவர்களின் அடையாளம்  எங்கோ ஒளிந்து கொண்டு தான் இருக்கும்!

அவர்கள் நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்லி  புறக்கணித்தால் அது  நமக்குத்தான் தீங்காக முடியும்.  மேலும் அவர்கள் நேரடியாக வருவதில்லை. எல்லாமே மறைமுகமாகத்தான் இருக்கும்.

அவர்களின் துரித உணவுகளான  KFC, McDonald போன்ற உணவகங்களில் கை வைத்தால், ஒன்றை மறந்து விடாதீர்கள், அந்த உணவகங்களில் நமது உள்ளூர் நிறுவனங்களும்  பங்கு பெற்றிருக்கும். அந்த உணவகங்களை நடத்துபவர்களே மலேசியர்கள் தான். அதிலும் நமது மலாய் நண்பர்களின் பங்கும் அதிகமாகவே உள்ளன.

'புறக்கணியுங்கள்'  என்று மக்களைத் தூண்டிவிடுவது ஏற்கத்தக்கதல்ல. அதனை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவது முற்றிலும் வெறுக்கத்தக்கது.  இதனை இன்று செய்பவர்கள் நாளை உள்ளூர் நிறுவனத்தையும்  புறக்கணிப்பு செய்யலாம். ஏதோ சீன நிறுவனம் தானே என்று இன்று  சொல்லுபவர்கள்  நாளை மலாய் நிறுவனம்  அல்லது இந்திய நிறுவனம் போன்ற மலேசிய  நிறுவனங்களுக்கும்  இந்த கதி வரலாம். ப்றக்கணிப்பு செய்பவர்களுக்கு ஏதோ ஒரு காரணம் வேண்டும். அவ்வளவு தான். அதனை அரசியாலக்க வேண்டும்.

மக்களைத் தூண்டி விடுவதை விட  நீங்களே முடிவெடுங்கள்.  உங்களுக்கு வேண்டாம் என்றால் நிறுத்திவிடுங்கள்.  புறக்கணித்தால், மற்றவர்களைத் தூண்டினால்,  அந்த தொழிலை நம்பி பலநூறு குடும்பங்கள் வாழ்கின்றன  என்பதை மறந்து விடாதீர்கள். 

புறக்கணிப்பு வேண்டவே வேண்டாம்!

No comments:

Post a Comment