Thursday 25 October 2018

இந்தியர்களின் குடியுரிமை...!

சமீபத்தில் 1641 இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய அப்படியொன்றும் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதை நாம் சொல்லித்தான்  ஆக வேண்டும். 

இதுவரை குடியுரிமை கிடைக்கப் பெற்றவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.  குடியுரிமை பெற்றவர்களில் 103 வயது  மூதாட்டியும் அடங்குவார்! இந்த வயதில் பாட்டியால் எதுவும் செய்ய இயலாது என்பதால் இதெல்லாம் பக்காத்தான் அரசாங்கத்தின் ஒரு சாதனையாக அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்; நம்மால். ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒன்று செய்யலாம். இந்த வயதான பாட்டிக்கு எந்தப் பதவியும் கொடுக்க முடியாது. முடிந்தால் அவருக்கு டத்தோ, டான்ஸ்ரீ, துன் பட்டங்களைக் கொடுக்கலாம்! அரசாங்கம் கொடுக்கும் பட்டங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ஜ.செ.க.கூறுகிறது. அதனால் இத்தனை ஆண்டுகள் பொறுமையோடு இந்த எருமைகளின் முடிவுக்காக அவர் காத்திருந்திருக்கிறார். அப்படியென்றால் இத்தனை  ஆண்டுகள் அவர் பட்ட வேதனைகள்,கஷ்டங்கள் அதற்கெல்லாம் என்ன தீர்வைக் காண முடியும்? பட்டங்களாவது கொடுக்கட்டுமே!

அதுவும் உள்துறைஅமைச்சர்  மொகிதின் யாசின் நல்லதொரு  விளக்கத்தை அளித்திருக்கிறார்.    "அரசாங்கம் வழங்கிய  தேர்தல்  உறுதிமொழிகளின் அடிப்படையில்  60 வயது அதற்கு மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது!"

குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்தவர்கள்  3853  என்பதும்  60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குக் குடியுரிமை  கொடுப்பதும் - பக்காத்தான் அரசாங்கம் - இந்தியர்களை,  பாரிசான் அரசாங்கத்தைப் போலவே, இளிச்சவாயர்களாக நினைப்பதாகவே தோன்றுகிறது.

நூறு  நாள்களுக்குள் நாங்கள் குடியுரிமை கொடுப்போம் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று என்று நாங்கள் கேட்கத்தான் செய்வோம். காரணம் இது ஒன்றும் கோடி கோடியாகப் பணம் செலவழிக்க வேண்டிய விஷயம் அல்ல. ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான குடியுரிமைகள் அமைச்சரின் அலுவலகத்தில் குவிந்து கிடக்கின்றன. அமைச்சரின் தலையசைவுக்காக அவைகள் காத்துக்கிடக்கின்றன என்று சொல்லப்படுகிறது.  

பாரிசான் அரசாங்கம் எப்படி ஒரு நேர்மையற்ற அரசாங்கமாக இருந்ததோ பக்காத்தானும் அப்படித்தான் செயல்படுகிறது என்பதும்  உண்மையிலுல் உண்மை.  சீனர்களுக்கு முன்னுரிமை  கொடுப்பதும் இந்தியர்களைப் புறம் தள்ளுவதும் பக்காத்தான் மேற்கொள்ளும் அரசியல் தந்திரமாகவே தோன்றுகிறது.

பார்க்கலாம்! இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனை அடுத்த தேர்தல் வரை இழுத்துக் கொண்டு போகுமோ!

No comments:

Post a Comment