Monday 1 October 2018

ஊழலக்குப் பிரம்படி..!

மலேசிய ஊழல் எதிர்ப்பு  ஆணையம் அரசாங்கத்திற்கு நல்லதொரு பரிந்துரையைச் செய்திருக்கிறது. ஒரு நபரின் ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் ஊறுதிபடுத்தப்பட்டால் அந்நபருக்குப் பிரம்படி தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்னும்  பரிந்துரையைப் பரீசலிக்க வேண்டும் என ஆணையம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை நாம் வரவேற்கிறோம். ஊழல் என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். குறிப்பாக சீனாவில் மரண தண்டனை அளவுக்கு ஊழல் கொண்டு சென்றிருக்கிறது! அதில் தவறு இல்லை. மனிதன் சமீப காலங்களில் திருந்துவான் என்று சொல்லுவதற்கில்லை. அறம் போற்றப்படுவதில்லை; அறம் கொண்டாடப்படுகிறது!

ஆக, பிரம்படி சரியானதொரு வழி தான்.  ஏற்றுகொள்ளக்கூடிய பரிந்துரை தான் அதில் சந்தேகமில்லை.

ஆனால் எந்த அளவு ஊழல் செய்யப்பட்டிருக்கிறது என்பதில் ஓரு வரையறை வேண்டும். இப்போது நம் கண் முன்னே நிற்பவர் முன்னாள் பிரதமர் நஜிப். அவருடைய வழக்கறிஞர் முகமது ஷாபி அப்துல்லா. நமது முன்னாள் ம.இ.கா. தலைவர்கள். இப்படி பல அரசியவாதிகள் இதில் அடங்குவர்.

எந்த அளவு என்று சொல்லுவதை விட யார் ஊழலில் ஈடுபட்டவர்கள் என்னும் வரையறை சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.  குறிப்பாக அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள் - இவர்கள் தான் நமது இலக்காக இருக்க வேண்டும். காரணம் இவர்கள் தான் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் என்று பெயர் வாங்கியவர்கள்! இவர்களிடமிருந்து தான் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

வெறும் பிரம்படி மட்டும் போதாது. அத்தோடு வழக்கமான தண்டனைகளான சிறைத்தண்டனை,  அபராதம் அனைத்தும் ஓரு கூட்டாக வர வேண்டும்.

ஊழலுக்கு பிரம்படி என்பது மிக மிக முக்கியம். ஊழலை நிறுத்த உடனடியான பலன் வேண்டுமென்றால் பிரம்படி தான் அதற்கான தீர்வு.

ஆனால் அரசியல்வாதிகள் இந்தப் பரிந்துரையை  ஏற்றுக்கொள்ளுவார்களா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment