Friday 14 December 2018

அரசியல் ஆசான்கள்...1

மலேசிய அரசியலில்,  அரசியல் ஆசான்கள் என்றால் முன்னாள் பிரதமர் நஜிப், ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் சாமிவேலு  - இவர்கள் இருவரும் தான் நம் கண் முன்னே நிற்கின்றனர்!

அரசியலை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கலாம், மக்கள் பணத்தை எப்படி எல்லாம் கொள்ளையடிக்கலாம், தனது அரசியல் எதிரிகளை எப்படி எல்லாம் பழி வாங்கலாம் என்பதைக் கல்லூரியில் பாடம் நடத்துகின்ற அளவுக்குத் திறமை வாய்ந்தவர்கள் இந்த இருவருமே!

சாமிவேலு யாருக்கும் பாடம் நடத்தவில்லாயாயினும் அவரின் கீழ் இருந்தவர்களுக்கு அவரே பாடமாக நடந்து கொண்டார்!  முடிந்தவரை சுருட்டிவிட்டு,  போகும் போது கூடாரத்தையும் காலி செய்த பெருமை அவருக்கு உண்டு! முடிந்த வரை இந்தியர்கள் முன்னேறவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்!

ஆனால் நஜிப் இன்னும் ஒருபடி மேல்!   தனக்குக் கீழ் இருக்கும் ஒவ்வொரு வரும் தன்னைப் போலவே சம்பாதிக்க வேண்டும், பணம் பண்ண வேண்டும், பொருளாதார ரீதியில் உயர வேண்டும் என்னும் உயர்வான எண்ணம் அவருக்கு இருந்தது! அந்த எண்ணத்தை அரசாங்கத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கும் அவர் பகிர்ந்து கொண்டார்!

சமீபத்தில் பிரதமர் மகாதிர் பேசும் போது அரசாங்க ஊழியர்கள் புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கான காரணம் இப்போது புரிகிறதா? அரசாங்கத்தில்  இலஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றால் அதனைக் கண்டு கொள்ள வேண்டாம் என்பது தானே முன்னாள் பிரதமரின் கொள்கை.  இப்போது அது குறைந்திருக்கிறது  என்பது நல்ல செய்தி. 

ஓர் இனத்தையே ஒழித்துக்கட்டும் அளவுக்கு அல்லது அழித்துக்கட்டும் அளவுக்கு  இந்த இனத்தின் மீது அவர்களுக்கு  அப்படி என்ன கோபம்? ஒரு  சில நாடுகளில் நாம் பார்த்திருக்கிறோம்  சர்வாதிகாரம்  என்னும் பெயரில்  அந்த நாட்டு  மக்களை  மனிதர்களாகவே  நடத்தப்படுவதில்லை. ஏழ்மை, பஞ்சம், பட்டினி -  இது தான் சர்வாதிகாரம். 

ஆனால் நமது நாட்டில்  ஜனநாயகத்தின் பெயரில் சர்வாதிகாரம்!  சாமிவேலு மலேசிய இந்தியர்களுக்கப் பெரியதொரு பொருளாதார குழியை  வெட்டினார்!  நஜிப் மலேசியர்களுக்கே மண்வாரி  இயந்திரந்த்தைக் கொண்டு மண் அள்ளிப் போட்டார்! கடைசியாக நாட்டை சீனாவுக்கு அடகு வைத்தார்! டாக்டர் மகாதிர் வந்தார்; தப்பித்தோம்!

மலேசிய அரசியலில் சாமிவேலுவும் நஜிப்பும் ஊழல்களுக்கு இரு பெரும் ஆசான்கள்! இவர்களைப் போன்று இனி ஒரு மனிதரை நாம் பார்க்க மாட்டோம்!  ஊழல் வரிசையில் இவர்களே கடைசி!


No comments:

Post a Comment