Tuesday 11 December 2018

கேள்வி - பதில் (89)

கேள்வி

இந்தியாவில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பிரதமர் மோடியின் அலை ஒய்வதாகத் தெரிகிறதே!

பதில்

அவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. ஒரு வேளை இந்தத் தோல்வியின் மூலம் மோடியின் பா.ஜ.க. தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளலாம்.

இத்தனை ஆண்டுகள் இந்துத்துவா என்று சொல்லிக் கொண்டு மற்ற மதத்தினர் அனைவரையும் புண்படுத்தினர். அவர்களின் தொண்டர்கள் எந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டனர். கொலை, கற்பழிப்பு என்று எந்த விதமான அச்சமும் இன்றி காவல்துறை உதவியுடன் அனைத்தையும் அரங்கேற்றினர். மக்களின் மரியாதைக்குறிய கோவில் அர்ச்சர்கள் கூட பெண்கள் என்று பார்க்காமல் தங்களின் கைவரிசையைக் காட்டினர். 

மோடி ஏன் பதவிக்கு வந்தார் என்பதற்கு ஒரே காரணம் பிராமணர்களை உயர்த்த வேண்டும், சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்க வேண்டும்  என்கிற இலட்சியத்தைத்  தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏன்,  அவர் சொந்த மாநிலத்தில கூட சொல்லும்படியாக அவர் எதனையும் செய்யவில்லை.

ஒரு விஷயத்தில் அவர் திறமையாளராய் இருந்தார். தன்னைப் பற்றி தம்பட்டம் அடிக்க உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களை நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டார்! தன்னைப் பற்றி மிகவும் உயர்வாக சித்திரிக்கவும்  தன்னுடைய ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய வள்ர்ச்சியைக் காண்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை அவர் ஏற்படுத்தினார்.   இந்த விளம்பரங்களுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களுக்கு  அவர் தினசரி ஒன்றரை கோடி ரூபாய் செலவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

நமக்குத் தெரிந்தவரை தமிழ் நாட்டு ஊடகங்கள் பெரும்பாலும் அவருடைய கட்டுப்பாட்டில்!  திரைப்பட தணிக்கைக் குழுவும் அவருடைய கட்டுப்பாட்டில்!

எந்த ஒரு சேவையும் இல்லாமல் வெறும் விளம்பரத்தை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு சேவை செய்ய வந்தவர் மோடி! அதற்கான பலன் தான் இந்தத் தேர்தல் முடிவுகள்!

கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று ஞாபத்திற்கு வருகிறது: விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது! மோடிக்கு அது நிச்சயம் பொருந்தும்!

No comments:

Post a Comment