Monday 31 December 2018

இது தான் நாரதர் வேலை என்பது!

பெர்சாத்துவின் இரண்டாவது பேராளர் மாநாடு வெற்றிகரமாக  நடைபெற்றது. நம்முடைய வாழ்த்துகள்!

மாநாடு ஏறக்குறைய அம்னோ மாநாடுகளைப் போலவே  கொஞ்சம் கலகலப்பு , கைத்தட்டல் பாணியிலேயே  நடந்தன!  ஆனால்  அம்னோ  மாநாடுகளைப்  போல வீராவேசமான பேச்சுக்கள்  இல்லை!  இனி  அதற்கான  வாய்ப்புக்கள்  குறைவு  என்பது  தான்   உண்மை!

ஆனாலும் ஒன்று நடந்தது. அதே அம்னோ பாணி பேச்சு. எவன் கெட்டால் நமக்கு என்ன என்கிற  அலட்சியப் போக்கு! நாடு  குட்டிச்சுவர்  ஆனால்  என்ன; எனக்கு என்ன கிடைக்கும் என்பது போல ஒர் ஆணவ  பேச்சு!

பிரதமர், டாக்டர் மகாதிர் தொடர்ந்து அடுத்த தேர்தல் வரை பதவியில்  இருக்க  வேண்டும்  என்பதாக தீர்மானங்கள், அதனை ஒட்டிய பேச்சுக்கள்  இவைகள் எல்லாம் அறிவார்ந்தவர்கள்  அந்த  மாநாட்டில்  க்லந்து  கொள்ளவில்லையோ என்கிற  ஐயத்தை  ஏற்படுத்துகிறது.

பிரதமரை  வைத்துக் கொண்டு இப்படிப் பேசுவது  அது எவ்வளவு  அசௌகரியத்தை அவருக்கு ஏற்படுத்தும் என்கிற  நாகரிகம் கூட  இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை! அது தான் அம்னோ நாகரிகம்! அந்தப் பாரம்பரியத்தைத்   தொடர வழி தேடுகிறார்கள்!

பக்காத்தான்  கூட்டணியில் ஏற்கனவே  பேசப்பட்ட ஒன்றை, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றை - இப்போது அது தேவை இல்லை என்பது போன்று பேசுவது  எந்த வகையிலும்  நாகரிகம்  என்று சொல்ல முடியாது! அதுவும் பிரதமரை  வற்புறுத்துவது மிக மிகக்  கொடுமையான செயல்!

நமது பிரதமர் இளைஞர் அல்லர். வயதான மனிதர். பக்கத்தான் அரசாங்கம் அமையும் முன்னரே தமது பதவி காலம் இரண்டு சொச்சம் ஆண்டுகள் என்பதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அது தெரிந்தோ தெரியாமலோ பக்காத்தான்  கூட்டணியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அதனை பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.

இந்த நேரத்தில் பிரதமரை வற்புறுத்தி பதவியில் இருக்கச் செய்வது எவ்வளவு கொடுமை.  வயதான காலத்தில் நான் பொய்யனாக இருக்க வேண்டுமா என்று அவர் நினைக்கலாம் அல்லவா. சொன்னச் சொல்லை மீறுவது அம்னோ தரப்பினருக்கு எந்த வெட்கமும் இல்லை ஆனால் பிரதமர் தான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறாரே தவிர ஒரு சராசரியாக இருக்க விரும்பவில்லை!

ஆமாம்! மலேசிய மக்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. வயதானவர்கள் மற்றவர்களுக்கு  உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர தவறான வழிகாட்டியாக இருக்கக் கூடாது என்பதில்  அவர்  உறுதியாக  இருக்கிறார். 

எந்த  நாரதர் வேலையும் அவரிடம்  எடுபடாது  என  நம்புவோம்!

No comments:

Post a Comment