Tuesday 18 December 2018

ஓராண்டு காலம் பதவி இல்லை! சரியா...?

பக்கத்தானில் இணையும் அம்னோ தலைவர்களுக்கு ஓராண்டு காலம் பதவி இல்லை என்பது சரியாக அணுகுமுறையா? 

சரியான அணுகுமுறை அல்ல என்பதே நமது நிலை! ஒன்றை நாக் கவனிக்க வேண்டும்.  அங்கிருந்து வருபவர்கள் யாரும் எனக்குப் பதவி வேண்டும் என்று கேட்டு வரவில்லை.  பதவி கொடுத்தால் தான் வருவேன் என்று யாரும் அடம் பிடிக்கவில்லை.  அவர்களுடைய கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அங்கிருந்து இங்கு வருகின்றனர். அப்படித் தான் இந்தக் கட்சி தாவல்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு வந்தால் பதவி கிடைக்கும் என்று அவர்கள் நினைத்தால்  அது தவறு. அப்படி அவர்களுக்குப் பதவி கொடுத்தால் அது இலஞ்சம் கொடுப்பதற்கு சமம்.

ஓராண்டு காலத்திற்குப் பதவி இல்லை என்பதெல்லாம் சரியாக வராது. அவர்களுடைய நாடாளுமன்ற பாதவி காலம் முடியும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். ஒரு வேளை அடுத்த தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவர்கள் வெற்றி பெற்று வந்தால் அதன் பின்னர் அவர்களுக்குப் பதவி கொடுப்பது பற்றி யோசிக்கலாம்.

இந்த தாவல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மாசு மறுவற்றவர்கள் என்பதால் அவர்கள் மக்களின் தொண்டுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அதனால் மீதம் உள்ள பதவி காலத்தில் மக்களின் தொண்டே மகேசன் தொண்டு என்று அவர்களை மக்களுக்கு ஊழியம் செய்ய விட வேண்டும்.  அதன் பின்னரே அவர்களுக்குப் பிற பதவிகள் கொடுப்பதைப் பற்றி முடிவெடுக்கலாம்.

இங்கு வந்தால் நாங்கள் பதவி கொடுப்போம் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தால்  அது நிச்சயமாக இலஞ்சம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அப்படி ஒரு நிலையிருந்தால் அது ஊழல் தடுப்பு ஆணையத்திடம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

ஓராண்டு காலம் பதவி இல்லை என்பது மக்களை ஏமாற்றும் ஒரு செயல். பதவி இல்லை என்பது தான் சரியான, விவேகமான ஒரு முடிவு.  தொண்டு செய்ய வந்தவர்களுக்கு உடனடியாக ஏதாவது பதவியைக் கொடுத்து உச்சி குளிர வைக்க வேண்டும் என்னும் அவசியமில்லை! 

ஓராண்டு காலம் என்பது சரியல்ல! தொடர்ந்து தொண்டாற்றுவோம் என்பதே சரி!

No comments:

Post a Comment