Wednesday 12 December 2018

தகுதிக்கு மீறிய சம்பளமா...?

புதிய பட்டதாரிகள் தகுதிக்கு மீறிய சம்பளம் கேட்கின்றனரா? 

என்னைக் கேட்டால் அது உண்மை தான் என்று சொல்லுவேன். பட்டதாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் பட்டம் பெற்று விட்டாலே அதுவே தங்களுக்கான தகுதி என்று நினைக்கின்றனர். ஆனால் வெளி உலகம் அப்படி அல்ல. முதலாளிகள் தங்களது தேவை என்ன - அந்தத் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா - என்று தான் பார்க்கின்றனர்.

பெரும்பாலான பட்டதாரிகள் அவர்கள் சார்ந்த துறையில் கூட  தேர்ச்சி பெற்றவர்களாக இல்லை என்பது தான் நமக்குள்ள கவலை! அது மட்டும் அல்ல எதனையும் படித்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும்   இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்! ஒன்றில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். வேலைக்கு வரும் முன்னே தங்கள் "தகுதி" என்ன அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தரப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

பொதுவாக அரசாங்கத் துறையில் பட்டப்படிப்பு படித்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் போதும். அவர்களுக்கு அறிவு இருக்கிறதா  இல்லையா போன்ற பிரச்சனைகள் இல்லை!  பட்டதாரிகளுக்கான சம்பளம் எவ்வளவோ அதுவே அவர்களின் சம்பளம்.  அதுவும் ஆங்கில அறிவு கூட அவர்களுக்குத் தேவை இல்லை.

தனியார் துறை என்பது வேறு. இங்கு இவர்களுக்கு ஆங்கிலம் தேவை. பேசும் திறன் வேண்டும்.  மொழி ஆற்றல் வேண்டும். வெளி நாட்டு நிறுவனங்களில் வெளி நாட்டவர் வேலை செய்வர். அவர்களுடனான தொடர்பு மொழி ஆங்கிலம். மேலும் எந்தத் துறையில் பட்டம் பெற்றிருக்கிறார்களோ அந்தத் துறையில் அவர்களுக்கு  ஆற்றல் வேண்டும்.

இப்போதுள்ள இந்த பட்டதாரிகளுக்கு ...ஊகும் ....அனைத்திலும் பூஜ்யம்.  அவர்களுக்கு அரசாங்கத் துறையே சரி வரும்.

இவர்களுடைய பிரச்சனை எங்கிருந்து ஆரம்பாமாகிறது என்பது புரியவில்லை. கல்லூரிகளில் என்ன தான் படிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

தகுதியே இல்லாதவர்களுக்கு தகுதிக்கு மீறிய சம்பளமா? அரசாங்கத்துறையில் அது நடக்கும்! தனியார் துறைகளில் அது நடக்காது!

No comments:

Post a Comment