Saturday 29 December 2018

வாழ்க! எழுத்தாளர் சங்கம்!

எழுத்தாளர் சங்கத்தில் கொஞ்சம் அறிவுள்ளவர்கள் அதிகம் என்பதால் தான் அவர்களை நாம் மதிக்கிறோம்.

பிரதமர் துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தியின் பிரச்சனையில் இவர்கள் ஏன் எந்தக் கருத்தையும் சொல்லாமல் இந்த அளவுக்க் இழுத்தடித்தார்கள் என்பது நமக்குப் புரியவில்லை. 

அவரைப் பற்றிய ஒரு பிரச்சனை ஒரு மாத காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஏனோ ஒன்றுமே தெரியாதவர்களைப் போல பேசா மடைந்தையாக இருந்ததற்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்று புரியவில்லை!

மற்றவர்கள் எல்லாம் முதலில் தங்களது கருத்துக்களைச் சொல்லட்டும் பிறகு ஆற, அமற  நமது கருத்தைச் சொல்லுவோம் என்று சங்கம் நினைக்கிறதா?  அல்லது இதற்கு ஏதேனும் கருத்தைச் சொன்னால் சங்கத்திற்கு ஆபத்து வரும் என்கிற எண்ணமாக இருக்குமா!

எப்படியோ, நமக்குத் தெரியவில்லை! ஓர் ஆதங்கத்தில் தான் இங்கு நான் எழுதுகிறேன். யார் யாரோ கருத்துக்களைச் சொன்னார்கள். எழுத்தாளர் சங்கம் அறிவார்ந்தவர்களைக் கொண்ட ஒரு சங்கம். கருத்துக்களைச் சொல்லப் பயப்படுகிறதோ என்று என்னைப் போன்ற சராசரிகள் நினைப்பது இயல்பு தான்.

தமிழ், தமிழர், கோவில்கள் -  இவைகள் எல்லாம் நமது உரிமைகள். நம்மிடையே ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நம்மைப் பாதிக்கிற விஷயங்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும். நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்.

சீனர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கல்வி இயக்கங்கள், பொது இயக்குங்கள் அனைத்தும் குரல் கொடுக்கும். அமைச்சர்களைச் சந்தித்து தமது எதிர்ப்புக்களைக் காட்டும். நம்மால் அதனைச் செய்ய முடியவில்லை. காரணம் பணத்தைக் காட்டினால் அரசியல்வாதி ப்ல்லைக் காட்டுகிறான். பத்திரிக்கைகள் அவனைப் பக்கம் பக்கமாக பாராட்டுகின்றன! 

பரவாயில்லை! காலம் தாழ்த்தியாவது வேதமூர்த்தியைப் பதவி விலகக் கூடாது என்று எழுத்தாளர் சங்கம் தீர்மானம் போட்டிருக்கிறதே அதற்காக அவர்களுக்கு ஒரு வாழ்த்து!

தமிழர் பிரச்சனைகளில் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என எழுத்தாளர் சங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகிறேன்! 

மீண்டும் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment