Friday 21 December 2018

சாடிக் விளக்க வேண்டும்...!

பெர்சாத்து,  இளைஞர் பிரிவு தலைவர் சைட்  சாதிக் சரியான விளக்கம் அளிக்க வேண்டும்.  

பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று பிரதமரிடம் அவர் கொடுத்த மகஜரைப் பற்றி போதுமான விளக்கங்கள் கொடுக்கப்பட  வேண்டும். சைட்  சாதிக், பககத்தான்  அரசாங்கத்தில் ஓர் அமைச்சராக இருக்கிறார். அதே சமயத்தில் அதே பக்கத்தான் அரசாங்கத்தில் வேதமூர்த்தியும் ஓர் அமைச்சராக இருக்கிறார். இந்தச் சூழலில்  ஒரே அரசாங்கத்தில் இருக்கும் ஓர்  அமைச்சர் இன்னொரு அமைச்சரைப் பற்றி மகஜர் கொடுப்பதும், அவரைப் பதவி விலகச் சொல்லுவதும் சரி தானா என்று யோசிக்க வேண்டும். அது உங்களுக்குச் சிறுபிள்ளைத்தனமாக தோன்றவில்லையா!

ஏன் கல்வி அமைச்சர் மஸ்லியைப் பற்றியும் தான் பதவி விலகச் சொல்லி  குரல் கொடுக்கின்றனர். அது பற்றி ஏன் சாதிக் கண்டு கொள்ளவில்லை என்னும் கேள்வியும் எழத்தானே செய்கிறது.  இப்போது வாய் மூடிக் கொண்டு இருக்கவும்,  மக்கள் குரலை கேட்காமல் இருக்கவும்,  தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக்கேட்காமல் இருக்கவும் தான் நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களா? தலை ஆட்டுவதற்கு தலை  எங்கே போயிற்று!

சாதிக், இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் மஸ்லி விஷயத்தில் பிரதமரிடம் மகஜர் கொடுக்காமல் இருக்கிறீர்கள்?  அவர் மலாய்க்காரர் என்கிற பயம் உங்களுக்கு உண்டு என்பது எங்களுக்கும் தெரியும். ஓர் இந்தியர் என்றால் பிரதமரிடம் மகஜர் கொடுக்கலாம், ஆர்ப்பாட்டம் செய்யலாம், தொடர் போராட்டங்களை நடத்தலாம், பதவி விலகச் சொல்லலாம், அப்படித்தானே! அதற்குத் தானே இளைஞர் பிரிவு?

சாதிக், நீங்கள் இனவாதி என்று நாங்கள் சொல்லலாமா? இந்தியர் என்றால் ஒரு மாதிரி வேஷம்! மலாய்க்காரர் என்றால் ஒரு மாதிரி வேஷம்! சீனர் என்றால் ஒரு மாதிரி வேஷம்!  இந்த நிலையில் நாங்கள் எப்படி உங்களைத் தட்டிக் கேட்கும் தளபதி என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்தியர்கள் என்றால் நாங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்கு "ஆமாஞ்சாமி" போட வேண்டும் என்று நினைக்கிறீர்களா>

எங்களைப் பொறுத்தவரை வேதமூர்த்தி இந்தியர்களுக்கான ஓர் அமைச்சர். இந்தியர்களின் நிலையை அறிந்தவர், அவர் சரியான வழியில் இந்தியர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார் என இந்தச் சமூகம் எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் அவரைப் பதவி விலகச் சொல்லுவது இந்திய சமூகத்திற்கு எதிராகக் கொடி பிடிப்பவர்களில் நீங்களும் ஒருவர் என நாங்கள் சந்தேகிக்க வேண்டியுள்ளது!

வேதமூர்த்தி என்ன தவறு செய்தார் என்பதற்கான விளக்கத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்.  பொது மக்களுக்கு உங்கள் விளக்கத்தைக் கொடுங்கள். அது போதும்!

No comments:

Post a Comment