Saturday 8 December 2018

அட! இதுவும் சரி தான் போலிருக்கு...!

கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் 2000 ஏக்கர் நில விவாகாரம் பற்றி இப்போது தான் வாயைத் திறந்திருக்கார் டான்ஸ்ரீ  வீரசிங்கம். (ம.இ.கா.வில் இவர் பெயர் தான் பிரபலம் அதனால் தான் இவர் பெயரைக் குறிப்பிடுவது புரிந்து கொள்ள உதவும்!)

நம்மைப் பொறுத்தவரை ம.இ.கா. வைப் பற்றிய நல்லண்ணம் நமது மக்களுக்கு எப்போதும் இருந்ததில்லை, ம.இ.கா. தலைவர்களைத் தவிர! கடந்த ஆட்சியின் போதும் இந்த நிலத்தை வைத்து இவர்கள் என்ன தான் செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு சில தினங்களுக்கு முன்னர் இந்த நிலத்தின் மூலம் ரி.ம. 7.00 லாபம் பெற்றதாக  செய்திகள் வந்தன! அதைக் கூட நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை! காரணம் அவர்களின் தகுதி அவ்வளவு தான். ம.இ.கா.வினர் எந்தக் காலத்தில் தங்கள் அறிவைப் பயன் படுத்திருக்கிறார்கள் அவர்களைப்  பற்றி பெருமைப்பட? அவர்கள் ஞானசூனியங்கள் என்பது தான் நாம் அறிந்ததாயிற்றே!

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கொல்லைப்புற வழியாக எப்படி சம்பாதிப்பது என்பது மட்டும் தான்! ஆக, இந்த 2000 ஏக்கர் நிலத்திலும் அது தான் நடந்திருக்கிறது. இது நாள் வரை வாய்த் திறக்காதவர்கள் இப்போது வாய் திறந்திருக்கிறார்கள்!  அதுவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியினால்! இல்லாவிட்டால் அந்த நிலம் எங்கே என்று தேட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்!

விபரம் தெரியாமல் உளற வேண்டாம் என்று சொல்லக் கூடிய தைரியம் ம.இ.கா. வினருக்கு மட்டுமே உரியது என்று எடுத்துக் கொள்ளலாம்.  இது சாமிவேலு காலந்தொட்டே அவர்களுக்குக் கிடைத்த தைரியம். அந்தத் தொடர்ச்சி இன்னும் அறுபடவில்லை! 

இவர்களின் கணக்கறிக்கையைக் காண இவர்களின் கணக்காளரின்  அலுவலகத்தைப் போனால் எல்லாம் விலாவாரியாகச் சொல்லி விடுவார்களாம்!  

சீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம், மலாய்க்காரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் எல்லாம் அறுவடைக்குத் தயாராகி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.  ம.இ.கா. வினருக்குக் கொடுத்த நிலம் .....படித்தவன் பாவம் செய்தால் போவான், போவான் ஐயோன்னு  போவான் ...என்பது பாரதி சொன்னது! நான் சொல்லவில்லை.

இவர்கள் ஐயோன்னு மட்டும் போக மாட்டார்கள், இவர்கள் குடும்பமே ஐயோன்னு போகும்!

எது எப்படி இருப்பினும் - எவ்வளவு "திறமைசாலிகளாக" இருந்தாலும்  எம்.ஏ.சி.சி. க்கும் ஒரு காலம் வரும் என்று பொறுத்திருப்போம்!

அது வரை இதுவும் சரி தான் போலிருக்கு!

No comments:

Post a Comment