Saturday 15 June 2019

கேள்வி - பதில் (102)

கேள்வி 

ராஜராஜ சோழனைப் பற்றி  தமிழ்ப்பட இயக்குனர் ரஞ்சித் பேசியது சரியா?

பதில்

அவர் பேசியது சரிதான் என்பதாக அவர் கூறுகிறார். அவர் படித்த புத்தகங்கள், அவர் படித்த  வரலாறுகள் - இவைகள் எல்லாம் அப்படித்தான் கூறுகின்றன என்பது தான் அவரது பதில்.

இருந்து விட்டே போகட்டும்.  அது வரலாறோ இல்லையோ அது அவருடைய கருத்தாகவே இருக்கட்டும்.  அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 

முதலில் அவர் தன்னைத்  தமிழன்  என்று  சொல்லிக் கொள்ளவில்லை. தன்னை தலித் என்கிறார்.  தலித்  தமிழனைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.  இருந்தாலும் அவர்  பேசுகிறார். இருந்து விட்டுப் போகட்டும்.

முதலில் அவருடைய ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.   தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி எல்லாம் தங்களுடைய  வாழ்க்கையை நடத்த ஒவ்வொரு நாளும் போரடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கும் தெரியும்.  அதுவும் இந்த விஞ்ஞான யுகத்தில்  அவர்கள் இன்னும் மனிதக் கழிவுகளை கையால் அள்ளிக் கொண்டிருக்கும் அளவுக்கு அவர்களைக் கீழ் நிலையில் வைத்திருப்பவர் யார்? தமிழர்கள் தானே என்று அவர் நம்புகிறார்,

ஆனால் அதற்குக் காரணம் தமிழர்கள் இல்லை. அறுபது ஆண்டு தமிழ் நாட்டின் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். இந்த அறுபது ஆண்டு கால ஆட்சி தமிழர்களுடையது அல்ல. அது திராவிடர்களின் ஆட்சி. பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுகிறோம்  என்று சொல்லிக் கொண்டு திராவிடக் கட்சிகள் தான் ஜாதியை வளர்த்தன. அப்படி ஜாதியை வளர்த்ததனால் தான்  இன்றும்  அவர்களால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது!  அன்று அவர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் எப்போதோ ஜாதியை ஒழித்துக் க்ட்டியிருக்கலாம். இப்போதும் அவர்களின் ஆட்சி தான்.  ஆனால் அவர்கள் ஆட்சியில் இருக்க ஜாதி அவர்களுக்குத் தேவைப்படுகிறது.  அதனால் அவர்கள் ஜாதியை வளர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். அதனால் ரஞ்சித் தமிழர்களின் மேல் கோபப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

அவருடைய நோக்கமெல்லாம் எதனைச் சொன்னால் தமிழர்கள் கோபப்படுவார்கள் என்பதைப் புரிந்து  வைத்திருக்கிறார்.  அதனால் தான் இந்த ராஜராஜ சோழனின் மீதான தாக்குதல். அதன்படியே இப்போது  நடந்து  கொண்டிருக்கிறது!

எவ்வளவு காலத்துக்குத் தான் ரஞ்சித் தன்னுடைய  கோபத்தை அடக்கி  வைத்துக் கொண்டிருப்பார் இப்போது அவருடைய நேரம்!  நாம் அலறிக் கொண்டிருக்கிறோம்!

No comments:

Post a Comment