கோலாலம்புர் - சிரம்பான் பேரூந்து சேவையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
வரவேற்கக் கூடிய ஒரு மாற்றம். பெண் பயணிகளுக்கான ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்.
காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. வேலைக்குப் போகும் பெண்கள் இந்த மாற்றத்தினால் பயன் அடைவர்.
முக்கியமாக காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான நேரம். அதே போல வேலை முடிந்து வீடு திரும்பும் அதே மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை மீண்டும் சவால்களைச் சந்திக்கும் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்பலாம்.
"பெண் பயணிகள் கேட்டுக் கொண்டதினால் நாங்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்" என்கிறார் போக்குவரத்து அமைச்சர். நல்ல, தேவையான மாற்றமே!
காலை நேரத்தில் வேலைக்குப் போகும் அந்த நேரத்தில் பெண் பயணிகள் படும் அவஸ்தை. பின் மாலை வேலையில் வீடு திரும்பும் போதும் அதே அவஸ்தை. இதற்க்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளியை வைத்திருக்கிறார் போக்குவரத்து அமைச்சர்.
குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்கள் இதனை வரவேற்பார்கள். காரணம் வேலைக்குப் போகும் ஆண்களோடு போட்டிப்போட்டுக் கொண்டு பேருந்தூகளில் ஏற வேண்டிய அவசியம் இனி இராது என நம்பலாம்.
ஒவ்வொரு நாளும் சுமார் 2000 பயணிகள் இந்த சிரம்பான் - கோலாலம்பூர் சிரம்பான் வழித்தடத்தை காலை - மாலை நேரங்களில் பயன்படுத்துகின்றனர். அனைவரும் வேலைக்காகப் பயணம் செய்பவர்கள். அவர்களுக்காகவே இந்த மாற்றத்தைப் பெண் பயணிகள் பயன் பெற கொண்டு வந்திருக்கிறார் அமைச்சர்.
இந்த "மகளிர் மட்டும்" மாற்றத்தை வர வேற்கிறோம். இது ஆரம்பம் தான். நல்லது கெட்டது என்பது போகப் போகத்தான் தெரிய வரும். நல்லதை மட்டும் யோசிப்போம்.
No comments:
Post a Comment