Friday 28 June 2019

நீங்கள் புத்தகப்பிரியரா....?

நீங்கள் புத்தகம் படிக்கும் பழக்கமுள்ளவரா? அப்படியென்றால் உங்களுக்கு எனது வாழ்த்துகள்!

ஓரிரு நாள்களுக்கு முன்னர் ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. ஆமாம். நமது பிரதமர் டாக்டர் மகாதிர் புத்தகப் படிக்கும் பழக்கம் உள்ளவராம்.  தினசரி புத்தகங்கள் படிப்பவராம். அதைப் படித்ததும் "அட! நம்ம மாதிரி தான்!" என்கிற உணர்வு வந்து விட்டது!

இப்போதெல்லாம் புத்தகம் படிப்பது என்பது அரிதாகி வருகின்ற ஒரு காலம்.  இளம் வயதில் நான் படிக்காத புத்தகங்கள் இல்லை. அப்படி விழுந்து விழுந்து படிப்பவன் நான். கண் கண்டதையெல்லாம் படிப்பவன். எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும் எனக்கு ஒரு நாள் போதும்! படித்து விடுவேன்! அவ்வளவு வேகம்!

நான் படித்தவை பெரும்பாலும் தமிழ் புத்தகங்கள் தான். ஏனோ ஆங்கிலப் புத்தகங்கள் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆங்கிலப் புத்தகங்களில் தன்முனைப்புப் புத்தகங்கள்,  தனிமனித வாழ்க்கை வரலாறுகள் - இவைகளைத் தவிர வேறு புத்தகங்கள்  நான் படிப்பதில்லை.

தமிழ்ப் புத்தகங்களை எடுத்துக் கொண்டால் ப்ல்வேறு புத்தகங்கள், பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் படித்தாலும் மிஞ்சி நிற்பதென்னவோ தன்முனைப்புப் புத்தகங்களும், வரலாறுகளும் தான். 

ஆனாலும் நான் பள்ளி காலத்திலிருந்து வாங்கியப் புத்தகங்கள் இன்னும் ஒரு சில இருந்தாலும் பல புத்தகங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன!  பணி நிமித்தம் நான்  பல  இடங்களுக்கு  மாறிப்  போனதால்  புத்தகங்களும் மாறிப் போய்விட்டன! பல புத்தகங்களை நானே நூல் நிலயங்களுக்குக்  கொடுத்து விட்டேன்.  காணாமல்  போவதை விட  இதுவே நல்லது!

இப்போதும் புத்தகங்கள் படிப்பதைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன்.    ஆனால் இணைய தளத்தில் அதிகம் படிக்கிறேன்.  படிப்பதை ஏனோ நிறுத்த முடியவில்லை.

படிப்பதற்கு எத்தனையோ வழிவகைகள் இருந்தாலும் புத்தகங்களைப் படிப்பதைப் போன்ற சுவராஸ்யம் எதிலும் இல்லை.

டாக்டர் மகாதிர் ஒரு புத்தகப் பிரியர் என்பதை அறிந்த போது என்னைப் பற்றியும் கொஞ்சம்  எழுத  இந்த  இடத்தைப்  பயன் படுத்திக் கொண்டேன்! 

நீங்களும் புத்தகங்கள் படிப்பதை  வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்!

No comments:

Post a Comment