Saturday 8 June 2019

அம்னோ - பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வருமா?

நீர், நில  இயற்கைவள அமைச்சர்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்  சமீபத்தில் தமிழ் அறவாரியத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

"அம்னோ=பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்  நமது நிலைமை படு மோசமாக் மாறும்" என்பதாக அவர் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.

உண்மை தான்.  நாங்களும் அதனை நம்புகிறோம். அதனால் தான் நாங்கள் உங்கள் மூலம் ஒரு புதிய ஆட்சியை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். நீங்கள் கூட அதனை சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.  பெரும்பான்மையான இந்திய மக்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குறிய விஷயம் தான்.  அதாவது 85 விழுக்காடு இந்தியர்கள் பக்காத்தானுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதாக புள்ளி விவரங்கள்  கூறுகின்றன.

உங்களுக்கு அது மகிழ்ச்சி அளித்தாலும் எங்களுக்கு அது மகிழ்ச்சி அளிக்கவில்லை. பல காரியங்கள் உங்களால் செய்ய முடியாததற்குக் காரணம் நிதிப் பிரச்சனை என்பதாகக் கூறியிருக்கிறீர்கள். 

எல்லாவற்றுக்குமே நிதிப் பிரச்சனை என்று கூறி மக்களைத் திசை திருப்பாதீர்கள். சான்றுக்கு இந்தியர்களின் குடியுரிமை  பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள்.  எதிர்க்கட்சியாக இருந்த போது குடியுரிமை இல்லாத இந்தியர்கள் 3,00,000 பேர் என்றீர்கள். இப்போது ஆட்சியில் இருக்கும் போது 3,000 பேர் என்கிறீர்கள். முதல்  நூறு  நாள்களில் பிரச்சனையை முடிப்போம் என்றீர்கள். இப்போது ஓர் ஆண்டாகியும் அப்படி முடிந்ததாகத் தெரியவில்லை.  

ஆமாம், இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனை தீர எத்தனை கோடி உங்களுக்குத் தேவைப்படுகிறது?  1000 கோடியா 2000 கோடியா?  இந்தியர்களின் வாழ்வாதாரம் இதில் அடங்கியிருக்கிறது.  நீங்களோ அரசாங்கத்திடம் பணம் இல்லை என்கிறீர்கள்!

இந்த ஒரு பிரச்சனையை நீங்கள் தீர்த்து விட்டாலே போதும்  நிச்சயமாக இந்தியர்களின் ஆதரவு  உங்களுக்குக் கிடைக்கும்.  ஆனால் உங்களால் இயலவில்லை!  நான்கு அமைச்சர்கள் என்பதில் எங்களுக்குப் பெருமையில்லை. உங்களால் இந்த சமுதாயத்திற்கு என்ன பயன் என்பதில் தான் எங்கள் கவனம் இருக்கும்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சரியாகச் செய்கிறீர்கள் என்பதில் கருத்து வேறு பாடில்லை. ஆனால் இந்திய சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தான் இந்த சமுதாயம் பார்க்கும் என்பதை மறக்க வேண்டாம்.

பொதுவாக பார்க்கும் போது உங்களிடையே ஒற்றுமை இல்லை என்பது தெளிவு. அப்புறம் என்னத்த இந்த சமுதாயத்திற்குக்காக கிழிக்கப் போகிறீர்கள் என்று தான் மக்கள் கேட்பார்கள். நான்கு அமைச்சர்கள் போதாத குறைக்கு ஏகப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் - ஏன் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன் அரசாங்கத்திடம் போதுமான அழுத்தத்தை கொடுக்க முடியவில்லை? 

வருங்கால தேர்தல்களில் மக்கள் உங்களை ஆதரிக்கவில்ல என்றால்- அல்லது இந்திய சமூகம் ஆதரிக்கவில்லை என்றால் - நீங்கள் தான் குற்றவாளி என்பதை மனதில் இருத்தி வையுங்கள்!                                                                                                                                                                                                                 

No comments:

Post a Comment