Sunday 1 September 2019

கேள்வி - பதில் (108)

கேள்வி

நடிகர் அஜித் குமார் இனி படங்களில் பெண்களைக் கேலி செய்வதை தவிர்ப்பாராமே!

பதில்

நல்லது தான். அவர் மகள் அனுஷ்கா சொன்ன ஒரு கருத்துக்காக தனது படங்களில் பெண்களைக் கேலி செய்வதை இனி தவிர்க்கப் போகிறாராம்.
நாமும் வரவேற்கிறோம். 

பொதுவாகவே அஜித் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல, நல்ல மனிதர் என்றும் சொல்லப்படுவதுண்டு.  

ஆனால் ஒரு விஷயம் நம்மை சிந்திக்க வைக்கிறது. அவரது இரசிகர்கள் அவரிடம் அன்பைப் பொழிகிறார்கள்.  உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். நமக்கு அதில் உடன்பாடில்லை!

அவருடைய இரசிகர்கள் சொல்லுவதை இது நாள் வரை அவர் காது கொடுத்துக் கேட்டிருப்பாரா? பெண்களைக் கேலி செய்வது, திருநங்கைகளைக் கேலி செய்வது, வயதானவர்களைக் கேலி செய்வது, பெற்றோர்களைக் கேலி செய்வது,  பெரியவர்களை "பெரிசு" என்று கேலி செய்வது,  அரசு பள்ளிகளை "கார்ப்பரேஷன்" பள்ளி என்று கேலி செய்வது - இவைகள் எல்லாம் தமிழ் திரைப்படங்களில் வரும் பொதுவான உரையாடல்கள்!

அஜித் படங்களிலும் வந்திருக்கலாம்.   அநேகமாக இப்போது வரும் எல்லாத் தமிழ்ப்படங்களிலும் இவர்களைக் கேலி செய்யும் வசனங்கள் வரத்தான் செய்கின்றன. இல்லை என்று சொல்ல முடியாது.

இது போன்ற வசனங்களையும் அஜித் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நடிகர் கவுண்டமணியும் செந்திலும்  நகைச்சுவை என்னும் பெயரில் அப்பாக்களை :வாடா! போடா!"  என்று பேசுவதும், கிண்டலடிப்பதும் மிகவும் பிரபலம். அதுவே இப்போது எல்லாப் படங்களிலும் தவறாமல் பேசப்படுகின்ற வசனமாகி விட்டது.

நடிகர் அஜித் அவர் மகள் சொன்னதைக் கேட்டு அதன்படி நடக்கத் தயாராகி விட்டார்.  மற்ற நடிகர்களுக்கு அப்பனுக்குப் புத்தி சொல்ல பிள்ளைகள் இல்லை! குறைந்தபட்சம் இரசிகர்கள் சொல்லுவதையாவது அவர்கள் கேட்க வேண்டும். 

அஜித் மகள் ஒரு முன்மாதிரி. வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment