Wednesday 11 September 2019

கமலி கலக்குவாரா...!

மாமல்லபுரம்  மீனவ குப்பத்தைச் சேர்ந்த கமலி என்னும் ஒன்பது வயது சிறுமி. 


தந்தை பெயர் மூர்த்தி. தாயின் பெயர் சுகந்தி. கமலியும் அவரது சகோதரனும் தாயின் அரவணைப்பில் இருக்கிறார்கள்.   சுகந்தி மீன் பஜ்ஜி கடை வைத்து தனது இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றி வருகிறார். இருவருமே தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

கமலி சிறு வயதிலிருந்தே கடல் சறுக்கு விளையாட்டிலும், ஸ்கேட்டிங் விளையாட்டிலும் தீராத ஆர்வம் கொண்டிருப்பவர்.




 எந்த நேரத்திலும் ஸ்கேட்டிங் போர்டும் கையுமாக இருப்பவர். 

ஸ்கேட்டிங் போட்டியில் இது வரை பல பரிசுகளை வாங்கி குவித்திருக்கிறார் கமலி. அவரது ஸ்கேட்டிங் திறமை அவரைப் பல ஊர்களுக்கும் பல நாடுக்ளுக்கும்  கொண்டு சென்றிருக்கிறது. மும்பை, பெங்களூரு, மங்களூர், மற்றும் சீன நாட்டுக்கும் போட்டிகளுக்காக சென்றிருக்கிறார் கமலி. பள்ளியில் நடக்கும் கபடி விளையாட்டிலும் பங்கு பெறுகிறார். ஆனால் இவரது முதல் இடம் என்பது ஸ்கேட்டிங் விளையாட்டுக்கு மட்டுமே.   ஸ்கேட்டிங் போட்டிகளுக்காக இன்னும் பல நாடுகள் செல்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

இவருடைய திறமையையும், ஆற்றலையும் வெளிச்சதிற்குக் கொண்டு வந்தவர் யார்?  இவரைப் பற்றியான ஓர் ஆவணப்படம் மூலம் வெளி உலகிற்கு அறிமுகமானவர்  கமலி.  ஆம் அந்த ஆவணப்படம் பல பரிசுகளை வாங்கிக் குவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கார் விருதுக்காவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு இந்த விளையாட்டெல்லாம் எதற்கு என்று கேள்வி கேட்டவர்கள் இப்போது தங்களது குழந்தைகளுக்கும் இந்த விளையாட்டைக் கற்றுத் தருமாறு கமலியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!  இப்போது இரண்டு குழந்தைகளுக்குக் கமலி ஆசிரியராக இருக்கிறார்!

கமலியின் இந்த ஆவணப்படம் அடுத்த ஆண்டு ஆஸ்கார் பரிசுக்காக  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

கமலி கலக்குவாரா! கலக்குவார் என நம்புவோம்!

No comments:

Post a Comment