Wednesday 4 September 2019

எப்படி.....?

நமக்குத் தெரிந்து எல்லாத் துறைகளிலும் அறிஞர்கள் இருக்கிறார்கள்.  நல்ல கல்விமான்கள் இருக்கிறார்கள்.

அதே போல சமயத் துறைகளிலும் அறிஞர்கள் பலர் இருக்கிறார்கள்.  நமது நாட்டில் அப்படி அறிஞர்கள் இருக்கிறார்களா என்கிற ஐயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. 

காரணம் இப்போது தான் நாம் முதன் முதலாக ஜாகிர் நாயக்கை இஸ்லாமிய அறிஞர் என  சொல்லுகிறோம்.  அப்படி என்றால் இந்நாள் வரை சமயத்துறையில் இங்கு யாரும் அறிஞர் இல்லை போலும்.

அப்படி இஸ்லாமிய அறிஞர் என்று மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரின் நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும். எந்த சமய அறிஞராக  இருந்தாலும் அவர்கள் விரும்புவதெல்லாம்  நாட்டிலோ உலகிலோ சமாதானம், அமைதி , நல்லிணக்கம், அன்பு என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால் ஜாகிர் நாயக் இதனையெல்லாம் மீறி ஓரு சமய அறிஞர் செய்யக் கூடாததெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்!  தவறு என்று தெரிந்தாலும் அவர் செய்யக் காரணம் என்ன? இப்படித் தவறுகள் செய்வதன் மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்க அவரால் முடிகிறது! ஆமாம் மதத்தின் பெயரால் பணம் சம்பாதிப்பதில் அவரும் ஒருவர். 

அவர் போகின்ற இடங்களில் எல்லாம் விஷ விதைகளை விதைத்தவர். தீவிரவாதத்தை வளர்த்தவர். நிச்சயமாக ஓர் அறிஞர் செய்கின்ற வேலை அல்ல இது!

ஓர் சமய அறிஞர் என்னும் போது அவர் எல்லாராலும் மதிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு இஸ்லாமிய நாடும் ஜாகிரை ஆதரிக்கவில்லை! அவர்கள் நாட்டிற்குள் புக முடியாதபடி அவரைத் தடை செய்து விட்டன!  அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு, நமது நாடான மலேசியா மட்டுமே!

அடைக்கலம் கொடுத்த நாடான மலேசியாவுக்கு அவர் செய்யும் கைம்மாறு என்ன?   மதத்தின் பெயரால்  மக்களிடையே பிரிவினையை உண்டாக்குதல், இஸ்லாம்  அல்லாத மக்களிடையே  அவர்களின் மதத்தைக் கேலி செய்தல் - இப்படித்தான் இவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தீவிரவாதம் அவருக்குக் கை வந்த கலை. இப்படித்தான் அவர் நமது நாட்டில் கலவரத்தை தூண்டிக் கொண்டிருக்கிறார்!  ஆனால் ஆளும் தரப்பினர்,   ஒரு சில தரப்பினரை திருப்தி செய்ய  வேண்டி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை!          

ஜாகிர் நாயக் ஓர் ஆபத்தான மனிதர். அவர் நோக்கம் சமய அறிஞருக்குறியது அல்ல!  கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பவர்! தீவிரவாதத்தைப் பரப்புவதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பவர்! கலகத்தை ஏற்படுத்துபவர்கள் அறிஞர்கள் அல்ல அஞ்சடிக்காரர்கள்! 

எப்படி? எப்படியோ!                         

No comments:

Post a Comment