Wednesday 4 September 2019

ஏன் நிரந்தர குடியுரிமை?

இஸ்லாமிய சமயப் போதகர், ஜாகிர் நாயக் பற்றியான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது!

ஏன்,  நாட்டில் ஏற்பட்டிருக்கும் சில பல பிரச்சனைகள் அனைத்தும் அவருடைய கை ஒங்கியிருப்பதையே காட்டுகிறது! 

ஒன்று நமக்குத் தெளிவாகிறது. இவர் போகின்ற இடங்களில் எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்துபவர் என்பது மிக மிகத் தெளிவு. தனது சுயநலத்திற்காக சமயத்தைப் பயன்படுத்துபவர்களில் இவர் முதன்மையானவர். 

மலேசியாவில் எதன் அடிப்படையில் இவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டது என்று பலர் கேள்விகளை எழுப்பினாலும் இப்போது சமீபமாக நெகிரி செம்பிலான், பெர்சாத்து கட்சியின் மாநிலத் தலைவர், டத்தோ ரைஸ் யாத்திம்  இதே கேள்வியை எழுப்பியுள்ளார்/ இன்னொரு கேள்வியும் நமக்கு உண்டு.  இவர் குடியுரிமை பெற்றவரா அல்லது நிரந்தர வாசியா என்பதும் நமக்குத் தெரியவில்லை.

நமக்குச் சில சந்தேகங்களும் உண்டு. பெர்சாத்து கட்சியின் தலைவர் டாக்டர் மகாதிர், நாட்டின் பிரதமர். இவரே முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்! காவல்துறை முடிவு செய்யட்டும் என்கிறார். அவரை நாடு கடத்த முடியாது என்கிறார். காவல்துறை,  தங்களது   அறிக்கையை சட்டத்துறையின் பார்வைக்கு அனுப்பி விட்டோம். இப்போது அவர்களது  பதிலுக்காக காத்திருக்கிறோம் என்கிறார்கள். ஆனாலும் பிரதமர் டாக்டர் மகாதிர் நாங்கள் அவரை அனுப்பப் போவதில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்!

இன்னொரு பக்கம் விளையாட்டுத் துறை அமைச்சர், சைட் சாடிக் விளையாட்டாகப் பேசுகிறாரா அல்லது வினையாகப் பேசுகிறாரா என்பதும் புரியவில்லை! ஜாகிரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வீராவேசமாக அறிக்கை விட்டார்.  அடுத்த நாளே ஜாகிருக்கு தனது வீட்டில் விருந்து வைத்து கொண்டாடுகிறார்! இவர் பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியின் த,லைவர்.

இப்போது நெகிரி மாநில பெர்சாத்து கட்சியின் தலைவர் டத்தோ ரைஸ் யாத்திம் தனது பங்குக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். "எதற்காக ஜாகிருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது,  எந்த வகையில் அவர் இங்குள்ள இஸ்லாமியர்களை விட திறமையானவர்"  என்று இப்படி பல கேள்விகளை எழுப்பியுள்ளார்!

உண்மையைச் சொன்னால் ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள பெர்சாத்து கட்சியே ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்று தான் நமக்குத் தோன்றுகிறது! ஒரு பக்கம் சட்டம், ஒழுங்கு என்று பேசுவதும் இன்னொரு பக்கம் "நாங்கள் அவரை வெளியேற்ற மாட்டோம்! என்று பேசுவதும் இப்போதைய இவர்களின் நிலைப்பாடோ என்று நினைக்கத் தோன்றுகிற்து!

சட்டத்துறை அலுவலகம் கூட சரியான முடிவை எடுத்தாலும் அவர்களும் "எங்களது முடிவை பிரதமருக்குத் தெரிவித்து விட்டோம்" என்று தான் சொல்லப் போகிறார்கள்!  பிரதமரைத் தவிர வேறு யாரும் முடிவு எடுக்க முடியாத நிலையில் ......ஜாகிர் இன்னும் நாட்டில் பல சேதங்கள ஏற்படுத்தலாம்!

ஏன் நிரந்தர குடியுரிமை?  ஜாகிர் இங்கு இருந்ததற்கான் அடையாளம் வேண்டும் அல்லவா! அதற்காகத்தான்!

No comments:

Post a Comment