Sunday 1 September 2019

கேள்வி - பதில் (109)

கேள்வி 

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறாரே!

பதில்

இந்தச் செய்தியைப் படித்ததுமே "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பால குமாரா!"   என்கிற எழுத்தாளர் பாலகுமாரனின் வசனம் பளிச்சென்று கண் முன் நின்றது!

இப்படி ஒரு பதவி கிடைப்பதற்கு இவர் மட்டும் அல்ல. பொன்னார், ராஜா - இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டுக்கு என்னன்ன துரோகம் செய்தார்கள் என்பதை சமீப காலங்களில் நடந்த பிரச்சனைகளை வைத்து ஓரளவு இவர்களை மதிப்பிடலாம்.

ஒரு பதவியைப் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் இவர்கள் செய்வார்கள்.

நமது கலாச்சாரம், நமது மொழி, நமது நிலம் அனைத்தையும் காட்டிக் கொடுத்த தால் தான் இப்படி ஒரு பதவி இவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது!

அவர் தமிழ்ப் பெண் என்பதற்காக நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஒரு தமிழ்ப்பெண் போல அவர் நடந்து கொள்ளவில்லை.  தமிழர்கள் பெருமைப்  படுவது போல அவர் நடந்து கொள்ளவில்லை.

பா.ஜ.க. செய்த அத்தனை அட்டுழியங்களுக்கும் துணை போனவர். மத வெறியை உண்டாக்கியவர்களோடு சேர்ந்து கொண்டு இவரும் மத வெறியராக மாறியவர். மத நல்லிணக்கம் என்பதெல்லாம் கேலிக் கூத்தாக மாற்றியவர்.

தமிழை எதிர்த்தவர். தமிழ் நாட்டில் சமஸ்கிருதத்தை புகுத்தியவர்.

வேண்டாம்! இது போதும்! குறிப்பாக  பா,ஜ,க, வுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் அவரிடம் உண்டு. அத்தனை அட்டுழியங்களுக்கும் சொந்தக்காரர்.

இவர் காங்கிரஸ்காரர் குமரி அனந்தனின் மகள் என்பது வருத்தப்படக் கூடிய ஒரு செய்தி. அவர் தந்தையே இந்த நியமனத்தைப் பற்றி பெருமைப் படுவாரா என்பது சந்தேகமே!

கடைசியாக,பதவிக்காக எப்படியெல்லாம் மக்கள் அடித்துக் கொள்ளுகிறார்கள் என்று நினைக்கும் போது - என்ன செய்வது? - ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை!  ஆனால் அவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை!

ஆளுநர் பதவியை வைத்துக் கோண்டு நல்லது சேய்ய இறைவன் தமிழிசையை ஆசீர்வதிக்கட்டும்!

No comments:

Post a Comment