Sunday 8 September 2019

நாட்டு நடப்பு எப்படி...?

நாட்டு நடப்பு என்ன நிலையில் இருக்கிறது? இப்போது  மக்களிடம் உள்ள கேள்வி இது தான்!

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  எல்லாம் எப்போதும் போலவே போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தவிர புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை!

சென்ற தேர்தலில் மக்கள் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். அறுபது ஆண்டு கால சரித்திரம் மாற்றியமைக்கபப்பட்டது  என்பதைத் தவிர வேறு எந்த மாற்றமும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை!

என்ன காரணமாக இருக்கும்! இப்போது நமது பிரச்சனையே பிரதமர்,  டாக்டர் மகாதிர் தான்!  தேர்தலில் வெற்றி பெற அவருடைய பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. அங்கு அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை.  அவர் பிரதமர் பதவி வேண்டாம் என்றாலும் வேறு வழி இல்லாமல் தான் அவர் மீது அந்தப் பதவி திணிக்கப்பட்டது!

ஆனால் இது வரை எல்லாமே சரி தான். பக்காத்தான் அரசாங்கத்தின் மீதான குறைபாடுகள் என்ன?

டாக்டர் மகாதிர் முக்கிய ஆயுதமாக கையில் எடுத்தது முன்னாள் பிரதமர் நஜிப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தான். ஊழல் குற்றச்சாட்டோடு அவர் நாட்டை மாபெரும் அழிவு பாதைக்கு இட்டுச் செல்கிறார் என்பது மட்டும் தான் டாக்டர் மகாதிரின் முன் உள்ள பிரச்சனையாக இருந்தது. அதில் மட்டும் தான் அவர் கவனம் செலுத்தினார்.  பெரும் கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டுக் கொண்டு வந்து விட்டார். நஜிப் மீதான ஊழல் வழக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  

உண்மையைச் சொன்னால் அவர் வந்த பணி முடிவடைந்தது. . மற்றபடி பக்காத்தான் அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி எதுவும் செய்யவில்லை என்றால் டாகடர் மகாதிர் அதில் கவனம் செலுத்தவில்லை  என்பது தான் பொருள். 

அவர் என்ன நினைத்தரோ அந்தப் பணிகள் முடிந்தன.   மற்றபடி அவர் பாதை என்பது முன்னைய பாரிசான் கட்சியின் வழி தான் அவர் வழி! வேறு புதிய வழிகளுக்கு அவர் தயாராக இல்லை! அவர் பதவி விலக தயாராக இருந்தாலும்  அவரது கட்சியினர் அவரை விட தயாராக இல்லை!

இதே அரசாங்கத்திற்கு அன்வார் இப்ராகிம் பிரதமராக வந்திருந்தால் பல மாறுதல்களைக் கொண்டு வந்திருப்பார். இப்போது இரண்டும் கெட்டான் நிலைமையில் நாடு தடுமாறுகிறது! ஒரு பெரிய மனிதரை, வயதில் மூத்த தலைவரை சும்மா போங்க என்று விரட்டி அடிக்க முடியாது! இப்போது அவர் கையில் தான் மந்திரக்கோல் இருக்கிறது! அவர் தான் மற்றவர்களை விரட்டுவாரே தவிர  மற்றவர்கள் அவரை விரட்ட முடியாது!

ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணமானவர் டாக்டர் மகாதிர் தான்!  என்ன செய்யலாம், சொல்லுங்க! பக்காத்தானைப் போல நாமும் "அந்நாள் எந்நாளோ!" என்று பாடிக் கொண்டிருக்க வேண்டியது தான்!

No comments:

Post a Comment