Wednesday 18 September 2019

சிவ நாடாரைப் பாராட்டுவோம்!

தான் படித்த பள்ளியை  எத்தனை பேர் திரும்பிப் பார்க்கின்றனர்? 

எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பலர் தாங்கள் படித்த பள்ளியை மறப்பதில்லை.   மறப்பதில்லை மட்டும் அல்ல தங்களால் இயன்ற அளவு அந்தப் பள்ளிகளுக்கு உதவவும் செய்கின்றனர்.

தான் படித்த பள்ளியில் மேல் உள்ள பற்று இங்கு மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் உண்டு. 



அதே போல இந்தியாவின் பத்து பணக்காரர்களில் ஒருவரான சிவ நாடார் அவர் மதுரையில் படித்த இளங்கோ அரசு மேல்நிலைப் பள்ளியை நினைவு கூர்ந்து  அந்த அரசுப் பள்ளியை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதன் தரத்தினை உயர்த்தியிருக்கிறார். புதிய கட்டடம் மட்டும் அல்ல தரமான கல்வியைக் கொடுக்கும் பள்ளியாக   அந்தப் பள்ளியை மாற்றி அமைத்திருக்கிறார். 



புதிய 24  வகுப்பறைகள்,  15 அடி நீள கரும்பலகைகள், பள்ளிக்குள்ளேயே 24 மணி நேர தண்ணீர் வசதி,  சூரிய ஒளியில் இயங்கும் வகுப்பறைகள்,  100 கணினிகளைக் கொண்ட  கணினி பயிற்சி மையம், தனியார் நிர்வாகத்தில் கழிவறைகள்,  குளிர்சாதன வசதிகளுடன் நூல் நிலையம்,  பள்ளி வளாகத்தில் அழகிய பூங்கா, கூடைப்பந்து மைதானம் அத்தோடு புதிய இரண்டு பள்ளிக் கட்டடங்கள் என்று கலக்கியிருக்கிறார் சிவ நாடார்.

சுமார் ரூபாய் பதினைந்து கோடியை  தான் படித்த பள்ளிக்கு ஒதுக்கியிருக்கிறார் சிவ நாடார். அத்தோடு அவர் பணி முடிந்து விட வில்லை. தொடர்ந்து பள்ளியின் கல்வி வளர்ச்சியையும் கண்காணித்து வருகிறார். இப்போதெல்லாம் அங்கு படிக்கும் மாணவர்கள் பரிட்சைகளில் நூறு விழுக்காடு தேர்ச்சி அடைகின்றனர்.

சிவ நாடார் தமிழ் வழி கல்வி கற்றவர்.  அவரின் நன்றியுணர்ச்சியை நாம் பாராட்டுகிறோம்.

No comments:

Post a Comment