Friday, 20 September 2019
ஸாகிருக்கும் மகாதிருக்கும் அப்படி என்ன நெருக்கம்?
நமது நாட்டு சட்டத் திட்டங்களின் படி ஸாகிர் நாயக் இந்நேரம் இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கப்பட வேண்டும்.
ஆனாலும் அது நடக்கவில்லை. ஒரே இழுபறி. அந்த இழுபறிக்குக் காரணம் பிரதமர் டாக்டர் மகாதிர்!
அவர் சொல்லுகின்ற காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. ஸாகிரை வைத்து எதிர் கட்சிகள் அரசியல் ஆட்டம் ஆடுகின்றன என்கிறார். இருக்கலாம்.
இன்றைய நிலையில் ஸாகிர் தப்பி ஓடிவந்து அடைக்கலம் புகுந்தவர் என்பது போய் ஸாகிர் ஏதோ மலாய் இனத்தவரைக் காக்க வந்த காவலன் என்கிற மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!
டாக்டர் மகாதிரும் எதிர் கட்சியினரோடு சேர்ந்து கொண்டு அவர்கள் ஆடுகின்ற ஆட்டத்திற்கு இவரும் ஆடுகிறார்! இவரும் நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கிறது என்பதை மறந்து ஆடுகிறார்!
இந்திய அரசாங்கம் ஒன்றைச் சொல்லுவதும் இவர் ஒன்றைச் சொல்லுவதும் நாட்டில் எல்லாமே தமாஷாக போய்க் கொண்டிருப்பாதாகவே தோன்றுகிறது!
அதிலும் குறிப்பாக மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் இந்தியத் தலைவர்களை காவல்துறை நீண்ட நேரம் விசாரிப்பதும் - அவர்கள் குற்றவாளிகள் - என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதும் இதுவரை இந்த நாட்டில் நடைபெறாத ஒரு முன்னுதாரணம்!
பிரதமர், டாக்டர் மகாதிர் என்ன தான் நினைக்கிறார்? ஸாகிர் நாயக்கின் கொள்கை நாம் அறிந்தது தான். ஒரே கொள்கை தீவிரவாதம் மட்டுமே! அது மற்றவர்களுக்கு! அவருக்குத் தீவிரவாதத்தின் மூலம் வரும் பணம்! ஸாகிர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர். இப்போது இந்த நாட்டையே தனது பிடியில் வைத்திருப்பதாக நினைக்கிறார் ஸாகிர் நாயக்! ஒண்ட வந்த பிடாரிக்கு இந்த அளவு ஊர்ப் பிடாரிகள் இடம் கொடுத்தால் இது தான் நடக்கும்!
இந்த இருவரின் நெருக்கம் எங்கே போய் முடியும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒண்ட வந்த பிடாரி ஓடத்தான் வேண்டி வரும்! அதனை மாற்ற முடியாது!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment