Tuesday 17 September 2019

"மேக்பை" மேய்ந்து விட்டது...!


                                                                   Magpie Bird

பொதுவாக பறவைகள்  மீதான நமது அபிப்பிராயம் அப்படி ஒன்றும் கெடுதலாக இருந்ததில்லை.  ஆனால் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் பறவைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகள் நமது அருகில் இல்லை என்பதைத் தவிர மற்றபடி அவைகள் இல்லை என்று சொல்ல முடியாது.

மேலே உள்ள "மேக்பை" என்னும் பறவைகள் ஆபத்தானவை. இவைகள் அதிகமாக ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.

சமீபத்தில் 76 வயதுடைய நபர் ஒருவர் தனது சைக்கிளில். தலைக் கவசத்துடன், பூங்கா ஒன்றில் சுற்றிக் கொண்டிருக்கும் போது இந்த மேக்பை பறவையால் தாக்கப்பட்டார்.  அவரது தலையில் குறி வைத்து தொடர்ந்து தாக்குதலை அது மேற் கொண்டதும் அவரது கவனம் சிதறி அதன் தாக்குதலிலிருந்து தப்பிக்க  முயன்ற போது வேலி ஒன்றில் மோதி படு காயமடைந்தார்.  மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.


 பொதுவாக வெயில் காலங்களில் இந்தப் பறவைகளின்  தாக்குதல் என்பது எப்போதும் நிகழ்வது தான்.  சாலையில் நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் இவர்களை தாக்குவது என்பதும் புதிதல்ல. ஆனால் இந்த முறை அது மரணத்தில் முடிந்திருக்கிறது.



இந்தப் பறவைகள், மனிதர்கள் தங்களது எல்லைகளை 'ஆக்கிரமிக்கும்'  போது அவைகள் ஆவேசமடைகின்றன.  அதுவும் குறிப்பாக அவைகள் குஞ்சு பொறிக்கும் காலங்களில். அதனாலேயே மனிதர்கள் மீதான இந்தத் தாக்குதல் என்பதாக சொல்லப்படுகின்றது. 

 மேக்பை பறவைகள் சட்டப்படி பாதுகாக்கபட்ட பறவைகள்.  ஆனால் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் அவைகளுக்கும் ஆபத்து தான்!



No comments:

Post a Comment