Sunday 22 September 2019

ஒரு புதிய பாடகர் உதயம்...!

         பார்வையற்ற இளைஞர்  திருமூர்த்தி - இசையமைப்பாளர் இமான்
      
இப்போதெல்லாம் தீடீர் தீடிரென நம்மை அதிர்சிக்குள்ளாக்கும் செய்திகள் வெளியாகின்றன!  அதனாலென்ன நல்ல செய்திகள் என்றால் கைக்கூப்பி வரவேற்போம்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் மும்பையில் ஒர் அதிசயம் நடந்தது. ஆமாம்,  பாலிவூட் பட உலகிற்கு  புதிய பாடகி  ஒருவர் ஒரு ரயில்  நிலையத்தில் எப்போதும் போல  பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி,  திடீரென பாலிவூட் பின்னணி பாடகி ஆனார்!

அதே போல இப்போது கோலிவூட்டிலும் ஓர் அதிசயம் நடந்திருக்கிறது! தமிழகம், கிருஷ்ணகிரி மாவட்டம்,  நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற  இளைஞர் திருமூர்த்திக்குத் தான் அவரது வாழ்க்கையையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. 

விஸ்வாசம் திரைப்படத்தில் வரும் "கண்ணான கண்ணே"  என்னும் பாடலை அவர் பாட - அந்தப் பாடல் சமுகத்தளங்களில் வைரலாக மாற -  அந்தப் பாடலுக்கு இசையமைத்த இமான் பார்வைக்குப் போக - திருமூர்த்தியின் வாழ்க்கையே மாறிவிட்டது!

இமான் உடனடியாக அந்த இளைஞரை தொடர்பு கொண்டு பேசி அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

முகநூல்களில் வருகின்ற செய்திகளுக்கு எத்தனை வலிமை என்பதை நாம் உணர்கிறோம்.  நல்ல செய்திகளே வர வேண்டும் எனவும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இதோ அந்த கண்பார்வையற்ற இளைஞனுக்குப் பாடுவது மட்டும் அல்ல கண்பார்வையும் கிடைக்க வேண்டுமென இறைவனைப் பிரார்திப்போம்.

அந்த இளைஞநுக்கு வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் டி.இமானையும் வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment