Thursday 19 November 2020

பெருமை சேர்க்கும் தமிழ்ப்பெண்கள் (1)

 சமீப காலங்களில் தமிழ்ப் பெண்களில் இருவர் பெயர்கள் உலகளவில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. அதிலே ஒருவர் கமலா ஹாரிஸ் இன்னொருவர் செலின் கவுண்டர்.

அதிலே நமக்குப் பெருமை தான்.

                


  இவர் தான் கமலா ஹாரிஸ். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக தெர்ந்தெடுக்கப்பட்டவர். 

தமிழ் நாடு,  மன்னார்குடி, துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்.  தாயார் பெயர் சியாமளா கோபாலன், ஆராய்ச்சித் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.தந்தையாரின் பெயர் டொனால்ட் ஹாரிஸ்,ஜமாய்க்கா நாட்டைச் சேர்ந்தவர்.  பேராசிரியராகப் பணி புரிந்தவர்.   

கமலா தமிழ் நாடு, சென்னைக்குப் பல முறை வருகை தந்திருக்கிறார். அதே போல அவரது தந்தையின் குடும்பத்தினரையும் ஜமாய்க்காவுக்குச் சென்று பார்த்து  வந்திருக்கிறார். அவரின்  பெற்றோர்கள் அவர் ஏழு வயதாக இருக்கும் போது பிரிந்து விட்டனர்.

அவர் தன்னை கறுப்பர் என்பதாகவே அடையாளப்படுத்துகிறார். காரணம் அவர் வாழ்ந்த பகுதியில்  கறுப்பர்கள் அதிகமாக இருந்தனர்.  கறுப்பர்கள் படித்த பள்ளிகளில் படித்திருக்கிறார். அவருடைய தொடர்புகள் கறுப்பர்களிடையே அதிகமாக இருந்தன; இருக்கின்றன. அவர் தந்தையும் ஒரு கறுப்பர். நமக்கு  அதில் ஒன்றும் வருத்தமில்லை. நாமும் கறுப்பர்கள் தானே!

இன்று உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த பதவியில் இருக்கும் ஒரே தமிழ்ப்பெண் என்றால் அது கமலா ஹாரிஸ் தான்.  அந்தப் பதவிக்கு மிஞ்சி எதுவுமில்லை! நம் ஆண்கள் கூட அந்த சிகரத்தைத் தொட முடியுமா? தெரியவில்லை!

மன்னார்குடி மட்டுமா கலகலக்கிறது துளேசேந்திரபுரமும் தான் பளபளக்கிறது!

No comments:

Post a Comment