Friday 6 November 2020

இது போதும்!

 இன்றைய நாட்டின் சூழ்நிலைக்கு யார் காரணம்? அரசியல்வாதிகளே காரணம் என்பதைத் தான் நாடாளுமன்றம் குறைவான எண்ணிக்கையுடன் தொடங்கப்படுவதற்கான சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம்!

அது போதும்! அது தான் நமக்கு  வேண்டும்!

அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு மகா அயோக்கியர்கள் என்பதை சபா  சட்டமன்ற தேர்தலின் போது தெரிந்து கொண்டோம்! அவர்கள் யோக்கியர்கள் என்றால் இப்போது மக்கள் இந்த அளவுக்குச் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.

இன்று நடப்பது என்ன?  மக்களின் நலன் மறக்கப்பட்டுவிட்டது. நலன் முக்கியமல்ல. அது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.  பதவிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

பிரதமர் முகைதீனின் அரசாங்கம் 'மக்களின் நலன்' என எதனையும் நினைத்துச் செயல்பட வழியில்லை! அந்த அளவுக்கு அவரின் நிலை மோசமாக இருக்கிறது. இடைக் குறிக்கீடுகள் அதிகம். 

இந்த நிலையிலும் அவர் தனது பதவியைத்  தற்காத்துக் கொள்ள நாம் எதிர்பார்க்காத, நினைத்துப் பார்க்காத புதிய புதிய வழிகளைக் கண்டு பிடித்து இன்னும் பிரதமராக இருந்து கொண்டிருக்கிறார்!

அதில் ஒன்று தான் இப்போது நாடாளுமன்றத்தில் பாதி பேர் கலந்து கொள்கின்றனர்!

எப்படியிருப்பினும் பிரதமர் முகைதீனின் அரசாங்கம் தொடர வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.  எதிர் கட்சிகள் அவருக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.

அரசாங்கத்தின் கொள்கைகள் விமர்சிக்கப்படலாம். பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்படலாம்.  எல்லாம் நடக்கட்டும்.  ஆனால் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நான் விரும்பவில்லை.

அதற்குக் காரணம் பொருளாதார வீணடிப்பு வேண்டாம் என்பது தான்.

கொரோனா தொற்று நோயினால் இன்று நாடு பல வழிகளில் நலிந்தும்  நசிந்தும  போன நிலையில்  இருக்கிறது. மக்களிடையே வேலை இழப்புக்கள் அதிகம். 

இன்றைய நிலையில் வசதியாகவும் வாய்ப்புடனும் வாழ்பவர்கள் அரசியல்வாதிகள் தான். மக்கள் அவதிப்படுகின்றனர்.  நோயின் தாக்கம் அதிகம்.  இன்னும் அரசாங்கத்தால் கொரோனாவைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடியவில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் அரசாங்கம் அடுத்த தேர்தல் வரை  "கவிழ்ப்போம்!" என்கிற பிரச்சனை இல்லாமல் தொடர வேண்டும். இங்கே அம்னோ கட்சியினர் மட்டுமே மிரட்டலாக இருந்தனர்.  அவர்கள் வாய்க்கும் தீனி போட்டாகி விட்டது!  இனி அவர்களின் பயமுறுத்தல் குறைவாகவே இருக்கும் என நம்பலாம்!

எப்படியோ ஆட்சி கவிழும் என்கிற பேச்சு இன்னும் கொஞ்ச காலம் இருக்காது. ஆனாலும் முகைதீன் அப்படியெல்லாம் அலட்சியமாக இருந்து விட மாட்டார்! அதனால் தான் நாடாளுமன்றத்தின் எண்ணிக்கை குறைப்பு. கவிழ்ப்பு பயத்திலிருந்து அவ்வளவு அளிதாக அவர் விடுபடமாட்டார்!

இப்போதைக்குக் கொரோனா கை கொடுத்திருக்கிறது! அதனால் கொரோனா தொடருமோ என்கிற பயமும் நமக்கு உண்டு!

No comments:

Post a Comment