Sunday 29 November 2020

தடுப்பு மருந்து உறுதிச் செய்யப்பட வேண்டும்!

 வெகு விரைவில் கோவிட்-19 தொற்றுநோய்க்கான மருந்துகள் நமது ஊர் எல்லைகளை அலங்கரிக்கும் என்னும் செய்திகள் நமக்கு ஆறுதலாக இருக்கின்றன.

என்ன செய்வது? உலகமே தொற்று நோயினால் துவண்டு போய்க் கொண்டிருக்கிறதே  தவிர இதுவரை எந்த ஒரு பயனான கண்டுபிடிப்புக்களும் வெளியாகவில்லை. 

இந்த நேரத்தில் சீனா தனது கண்டுபிடிப்பை நமது நாட்டில் அறிமுகப்படுத்தப் போகிறது. அதாவது நாம் அந்த மருந்தை வாங்கிப் பயன்படுத்தப் போகிறோம்.  அது  நல்ல  செய்திதான்.

நிச்சயமாக அந்த மருந்தை நமது நாட்டு ஆய்வகங்களில் ஆய்வு செய்த பின்னரே அந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என நம்பலாம்.

ஆனால் சீனாவின்  பொருள்கள் என்றாலே நமக்கு இயற்கையாகவே கொஞ்சம்  அச்சம் எழத்தான் செய்கிறது. தரமற்ற பொருள்களுக்குப் பெயர் போனவர்கள் சீனர்கள். அதுவும் இலஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளை நாம் கொண்டிருந்தால் சொல்லவே வேண்டாம்.  தரமற்ற மருந்துகளைத் தான் நாம் வாங்க வேண்டி வரும்!  அதனைத்தான் நாம் பயன்படுத்தப்பட வேண்டி வரும். பிறகு தரமில்லை என்று சொல்லி கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படும்!  இதெல்லாம் நடக்காது என்று சொல்ல முடியாது. ஒரு சில நாடுகளில் அது நடந்திருக்கிறது. 

சீனர்கள் எதுபற்றியும் கவலைப்படுவதில்லை. யாராக இருந்தாலும் அவர்களைத் தங்களது வலைக்குள் சிக்க வைத்து விடுவார்கள்! அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயும் நடக்கும்.

நமக்கு வேண்டியதெல்லாம் தரமான மருந்துகள். அவ்வளவு தான்.  ஆனால் நமது அரசியல்வாதிகளுக்கு அப்படி ஒரு தேவை இருக்காது. அவர்களுக்கென்று தனி மருத்துவமனை, தனி சிகிச்சை அனைத்தும் தனி தனி! ஆனால் பொது மக்களுக்கோ அப்படி ஒரு நிலை இல்லை. அனைத்தும் அரசாங்கத்தைச் சார்ந்தே இருக்கின்றன; இருக்கும்.

அதனால் அரசாங்கம் தனது ஆய்வுகளை ஒளிவு மறைவு இன்றி செய்ய வேண்டும். அது மக்களுக்கும் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.  பொது மக்களுக்கு நல்ல சிகைச்சைகள் கிடைக்க வேண்டும். 

அது தான் நமது நோக்கம். தடுப்பு மருந்து தடுப்பு மருந்தாகவே இருக்க வேண்டும்.  ஏதோ தட்டுமுட்டு சாமான்களைப் போல வாங்கிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நல்லதே நடக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment