Monday 30 November 2020

தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் தொடர வேண்டும்!

 முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கைப் பற்றி நமக்குப் பலவித அபிப்பிராயங்கள் உண்டு.

அவரின் மிகப் பெரிய பலவீனம் ஊழல் தான்! அது அவரது மனைவியின் ரூபத்தில் வந்து அவருக்கு மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது.

அவரது முன்னாள் பெருமைகளை எடுத்துச் சொல்ல மேடை அமைத்துக் கொடுப்பதில்,  மக்கள் சக்தி இயக்கத் தலவர்  டத்தோஸ்ரீ தனேந்திரனும்  ஒருவர்.  அது அவரின் எஜமான விசுவாசத்தைக் காட்டுகிறது. நமக்கு அதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

முன்னா பிரதமர் நஜிப் அவர்களைப் பற்றி நல்லவிதமான செய்திகள் வருகின்றன. "நான் தான் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமாக உதவியிருக்கிறேன்"  என்று அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதே போல இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும் அவர் அதிகமாக உதவி செய்திருப்பதாக அவரே சொல்லுகிறார்.

இந்தியர்களின் நலனுக்காக நிறுவப்பட்ட "செடிக்" அமைப்பைப்பற்றித் தான் அவர் இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தான் உதவியதாகக் கூறுகிறார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்

.செடிக் அமைப்பைப் பற்றி நமக்கு ஏற்கனவே ஓரளவு தெரியும். பெரும்பாலான செடிக் நிதி உதவி ம.இ.கா.வினருக்குத் தான் சேர்ந்தது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. அந்தப் பணம் இந்தியர்களுக்கு முழுமையாகப் போய்ச்  சேராமல்,  அந்த நிதி மீண்டும் அரசாங்கத்திற்கே ஒப்படைக்கப்பட்டதாக சொல்வதும் உண்டு.  அதாவாது நிதி உதவி பெற இந்தியர்களில் யாரும் தகுதி பெறவில்லை என்பதால் அந்தப் பணம் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதாவது அந்த நிதி  பிரதமரின் சொந்த பயனுக்காக ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது!

அதனால் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது ம.இ.கா. அடுத்து பிரதமர் என்பதோடு அது முடக்கப்பட்டு விட்டது! அது இந்தியர்களின் வளர்ச்சி அல்ல!

அதனை விடுவோம். தமிழ்ப்பள்ளிகளுக்கு அவர் உதவி இருக்கிறார் என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். அதற்காக அவரைப் பாராட்டுகிறோம். அவர் காலத்தில் புதிய தமிழ்ப்பள்ளிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன. குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும் அது மனநிறைவானது என்பதில் ஐயமில்லை.

இன்னொன்றையும் நாம் ஞாபகப்படுத்துகிறோம். அவர் காலத்தில் மெட் ரிகுலேஷன் கல்வி,  போலிடெக்னிக் (தொழிற்கல்வி) போன்ற கல்விக்கூடங்களிலும் இந்திய மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டன; இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. அதற்காக நிறைய முயற்சிகள் எடுத்த முன்னாள் ம.இ.கா. தாலைவர் டத்தோஸ்ரீ  G.பழனிவேல் அவர்களையும் நினைவு கூறுகிறோம்.

ஆக, நாம் முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களை முற்றிலுமாக ஒதுக்கிவிடவில்லை. தமிழ்ப்பள்ளிகளுக்கான அவரது சேவை மறந்து விடவில்லை. அதனை நாம் பாராட்டுகிறோம். ஆனால் அவரது ஊழலைத் தான் நாம் வெறுக்கிறோம்.

இப்போது நமது கேள்வியெல்லாம்: இப்போதும் அதே ம.இ.கா. இப்போதும்  அதே அவர்களின் ஆட்சி.  ஏன் இப்போது இந்த  தேக்க நிலை? குறிப்பாக கெடா மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. மலாக்காவில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. மத்தியில் என்ன நடக்கிறது என்பதும் நமக்குத் தெரிகிறது.

ஆனால் நஜிப் அவர்களது தலைமையில் இனி ஆட்சி அமையும் என்பதை ஏற்பதற்கில்லை. அது நடவாத காரியம்.  இனி அவரது அளுங்கட்சி அவரது பணியைத் தொடர வேண்டும். தொடருமா என்பது தான் கேளவி.

அது தொடராத வரை நஜிப் அவர்களின் புகழைப் பாடலாம்!


No comments:

Post a Comment