உலகம் பூராவும் இன்று கொரோனா தொற்று நோய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
நமது நாடும் விதிவிலக்கல்ல. மூன்றாவது அலையில் இப்போது நாமும் அலைக்கழிக்கப்பட்டு எங்கெங்கோ மோதிக் கொண்டிருக்கிறோம்! இந்த மூன்றாவது அலை என்பது நமது ஊர் ஆளும் அரசியல்வாதிகள் நமக்குப் பெருந்தன்மையாக வாரி வழங்கிய வைரம்!
அதை விடுவோம். நமது ஊர் உள்ளூர் பழங்களுக்கு என்ன வியாதியை அறிமுகப்படுத்தினார்களோ தெரியவில்லை!
பொதுவாக எல்லாப் பழங்களும் ஏதோ ஒரு வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கின்றன என்பது நமக்குத் தெரிகிறது! ஆனால் தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியவில்லை என்பது தான் சோகம்!
மிகச் சாதாரண பழமாக நம்மிடையே அதிகம் சாப்பிடப்படுவது வாழைப்பழம். இன்னொன்று பப்பாளிப் பழம்.
இந்த பழங்களுக்கு என்ன வியாதியை உருவாக்கினர்களோ தெரியவில்லை எதையும் சாப்பிடக் கூடிய நிலையில் இல்லை. வாழப்பழம் பாதி பழுத்தும், பாதி பழுக்காமலும் கடை,களில் விற்கப்படுகின்றன. பப்பாளி பழங்களின் நிலையோ இன்னும் மோசம். ஒவ்வொரு பழமும் ஏதோ கரடுமுரடாக இப்போது தான் அமேஸோன் காடுகளிலிருந்து வந்தவை போன்று தோற்றமளிக்கின்றன! அதுவும் சாப்பிடுக்கூடிய அளவுக்குப் பழமாக இருந்தால் கூட மன்னித்து விடலாம்! என்னவோ அரைப்பழம். , முக்கால் பழம் = ஏதோ வெந்தும் வேகாமல் இருப்பது போல - இந்த பழங்கள் விற்கப்படுகின்றன!
ஏன் இந்த பழங்களின் நிலை இப்படி ஆகிவிட்டது? யாரைக் குறை கூறூவது? விவசாயிகளிடமிருந்து ஏன் இப்படி இந்த பழங்கள் தாறுமாறாக வெளியாகின்றன?
ரசாயனத்தைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைக்கிறீர்களோ என்று ஒரு சீனப் பெண்மணியிடம் கேட்ட போது அவர் மறுக்கிறார். இப்படிச் செய்தால் எங்களுக்கு இன்னும் அதிகம் செலவாகும் என்கிறார்.
எப்படியோ நமது பழங்களுக்கும் கொரோனா தொற்றை உருவாக்கிவிட்டார்கள்! எதுவும் சாப்பிடும்படியாக இல்லை. சீனர்கள் கைகளில் விவசாயம் போகும்போது இப்படியெல்லாம் நடக்கும் என்ப்து நமக்குத் தெரிந்ததுதான்! ஆமாம், நேற்றுப் பொரித்த கோழிக்குஞ்சுகளையே பத்து நாள்களில் கோழிகளாக்கி விற்பனைக்குக் கொண்டுவருபவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா!
இருந்தாலும் இதையெல்லாம் கட்டுப்படுவதற்குச் சட்டதிட்டங்கள் உள்ளன. இப்போது அது பற்றியெல்லாம் யாரும் அக்கறைக் காட்டுவதில்லை.
பார்ப்போம்! இதுதொடர்கிறதா என்று.
நோயுள்ள பழங்களைச் சாப்பிட்டு நம்மையும் நோயாளிகளாக்குவதில் அப்படி என்ன பெருமையோ!
No comments:
Post a Comment