Friday 28 October 2022

குளிக்கும் பழக்கமில்லை!

 

                                             அமு ஹஜி, 94 வயதில் மரணமடைந்தார்

நீண்ட  ஆயுளை உடையவர்களை ஊடகவியலாளர்கள் பேட்டி எடுக்கும் போது ஒரு கேள்வி கேட்பதுண்டு.

உங்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் என்ன  என்று தவறாமல் ஒரு கேள்வியைக்  கேட்பார்கள். அதற்குப் பதில் பலவாறாக இருக்கும். "எனக்குப் புகையிலை பழக்கமில்லை. சுத்தமான காற்றை சுவாசிக்கிறேன். குறைவாகத்தான் சாப்பிடுகிறேன். மகிழ்ச்சியாக வாழ்கிறேன்" இப்படி பல்வேறு பதில்கள்

ஆனால் மேற்கண்ட மனிதரை  அப்படியெல்லாம் அந்த வலையத்திற்குள் சிக்கவைக்க முடியாது. இது வேறு வகையான ஒரு சாதனை.

ஆமாம்! ஈரான் நாட்டைச் சேர்ந்த அமு ஹஜி உலகில் மிக அழுக்கான மனிதர்  அதாவது நமது மொழியில்  "அழுக்கு மூட்டை"  என்பார்களே அப்படிச்  சொல்லலாம். அதற்குக் காரணம் உண்டு. சுமார் 67 ஆண்டுகள் அவர் குளிக்காமல் இருந்திருக்கிறார்! தனது 27-வது வயதில் அவர் குளிப்பதை நிறுத்திக் கொண்டார்!

அவர் ஏன் குளிப்பதை நிறுத்திக் கொண்டார் என்பது முழுமையாகத் தெரியாவிட்டாலும் அவருக்கும் யாரோ ஜோஸ்யம் சொல்லியிருப்பார்கள்  போல் தோன்றுகிறது!  'தண்ணீரில் உனக்குக்  கண்டம் உண்டு!  உன் மேல் தண்ணீர் பட்டால் நீ செத்துப் போவாய்!"  எனறு அவருக்குச் சொல்லப்பட்டதால் அத்தோடு அவ்ர் குளிப்பதை நிறுத்திக் கொண்டார்!

அவர் குளிக்காமல் அந்த 67 ஆண்டுகளையும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்.  ஆனால் அவரது கிராமத்தினர்  என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அவர் படாத கஷ்டத்தை கிராமத்தினர் பட்டிருப்பார்கள்  போல் தோன்றுகிறது! அவர்கள் அவரைப் பிடித்து குளிப்பாட்டி விட்டிருக்கின்றனர்! அதோடு மனிதர் மனம் ஒடிந்து போனார். 

ஏற்கனவே,  தன் மேல் தண்ணீர் பட்டால் இறந்து போவோம் என்கிற மனநிலையில் 67 ஆண்டுகளாக இருந்தவர்,  தண்ணீர் பட்டதும் மிரண்டு போனார். அவரால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர்  தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நீண்ட நாள் அவரால் வாழ முடியவில்லை.  கடைசியில் அவர் நினைததபடி தண்ணீர் அவருக்கு எமனாக மாறிவிட்டது!

அவரது  கிராமத்தினர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.  இவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உலகத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்கிற மனநிலைக்கு வந்திருப்பார்கள் போலிருக்கிறது! சும்மா அவரை விட்டிருந்தால் அவர் நூறு வயது வரை வாழ்ந்திருப்பார்! அவரை நாமும் அவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததற்கு என்ன காரணம் என்று கண்டு பிடித்திருப்போம்! அழுக்கு தான் காரணம் வேறு என்னவாக இருக்கும்?

ஆனால் இப்போது தீடீரென போய்ச் சேர்ந்துவிட்டார்! குளிக்க மாட்டேன் என்று சொன்னவரை இப்படி வலுக்கட்டாயமாக கொன்றுவிட்டார்களே! என்ன செய்ய? அவர் ஆத்மா சாந்தியடையட்டும்!


No comments:

Post a Comment