Saturday 7 January 2023

இவர்களை நம்பலாமா?

 

இத்தனை ஆண்டுகள் கண்ணில் அகப்படாத ஒரு விளம்பரம் திடீரென முகநூலில் பார்க்க நேர்ந்தது!

இது அதிசயம் தான், இல்லை என்று சொல்லவில்லை. நமது நாட்டில் குடியுரிமை பிரச்சனை என்றாலே  அதிகம் பாதிக்கப்பட்ட இனம் என்றால் அது இந்தியர்கள் தான். அதுவும் குறிப்பாக தமிழர்கள். 

மக்கள் இந்தக் குடியுரிமைக்காக எத்தனையோ ஆண்டுகள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அரசாங்கம் கேட்கின்ற அத்தனை ஆவணங்கள் இருந்தும் அவ்ர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுகின்றது. அது ஏன் என்று யாருக்கும் புரியவில்லை!

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது குடியுரிமைப் பெற  தகுதிப்பெற்றவர்கள்  யார் என்று எப்போது ஓர் அரசாங்க அலுவலர் அவரே ஒரு முடிவுக்கு வருகிறாரோ அப்போது தான் அவரின் தயவு  குடியுரிமைக்காக காத்திருப்பவருக்குக் கிடைக்கும்! அதுவும் எப்போது?  குடியுரிமைக்காக முப்பது, நாற்பது ஆண்டுகள் காத்திருந்து அவர் கண்ணை மூடுப்போகின்ற காலத்தில் தான் அவருக்குக் குடியுரிமை கிடைக்கும்! இப்படி ஓர் நடைமுறையைத் தான் இதுநாள் வரை அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது.  இப்படி ஒரு பெருந்தன்மையை உலகில் எந்தவொரு நாடும் வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை! பாராட்டுவோம்!

"உங்களது குடியுரிமை பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறோம்" எனறு மலேசிய இந்து சங்கம் ,  லோபாக், சிரம்பான் நகரிலுள்ள அமைப்பு  மக்களுக்கு உதவ முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே.

ஆனாலும் ஒரு சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. முதலில் இந்த செயதி எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் செய்திகள் வரும் பின்னர் 'அது நான் இல்லை!' என்பது போன்று மறுப்புத் தெரிவித்து இன்னொரு செய்தியும் வரும்!  அப்படி எந்த மறுப்பும் இந்நாள் வரை ஒன்றையும் காணவில்லை!

நம்மைப் பொறுத்தவரை இவர்கள் மூலம் உங்களுக்கு ஏதேனும் உதவி கிடைத்தால்  அதனை நாங்களும் வரவேற்கிறோம். நல்லதை யார் செய்தாலும் நாம் அவர்களை வரவேற்போம். ஆனால், யாராக இருந்தாலும் சரி உங்கள் கைப்பணத்தை மட்டும் இழந்து விடாதீர்கள். அவர்கள் செய்வது உதவியாகவே இருக்கட்டும்.

நமது சமுதாயம் பணத்தைக் கொடுத்து எல்லாவற்றிலும் இழந்த சமுதாயம். யார் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்  என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு ஏமாளிச் சமுதாயம். அதனால் உதவி செய்பவர்கள் உதவி செய்யட்டும்.  பணத்தை மட்டும் இழந்து விடாதீர்கள். அதுவே நமது அறிவுரை.

அனைத்தையும் அறிந்து கொண்டு செய்யுங்கள். ஏமாற்றுபவர்கள் எனத் தெரிந்தால் காவதுறையில் புகார் செய்யுங்கள். நல்லது நடக்கும் என்பதே நமது நம்பிக்கை.

No comments:

Post a Comment