ஆண்டின் கடைசி நாள். ஒரு வருடம் ஓடிவிட்டது. என்னத்தை சாதித்தோம் என்று புரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் வரும் போகும். சாதித்தது என்ன என்பது தான் புரியாத புதிர்!
Tuesday, 31 December 2024
ஆண்டின் கடசி நாள்!
ஆண்டின் கடைசி நாள். ஒரு வருடம் ஓடிவிட்டது. என்னத்தை சாதித்தோம் என்று புரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் வரும் போகும். சாதித்தது என்ன என்பது தான் புரியாத புதிர்!
Monday, 30 December 2024
இன்னும் விலை கூடலாம்!
இன்றைய நிலையில் எந்த உணவு அல்லது பானம் எந்த விலையில் விற்கப்படுகிறது என்பது யாராலும் கணிக்க முடியாத நிலைமையில் தான் நாம் இருக்கிறோம். எல்லாமே 100 விழுக்காடு விலையேற்றம் என்றால் யார் என்ன செய்ய முடியும்? யார் தான் விலைகளைக் கட்டுப்படுத்த முடியும்? அதற்கென தனி அமைச்சு இருக்கத்தான் செய்கின்றது. இருந்தும் இது போன்ற விலையேற்றங்கள் நடந்து கொண்டு தானே இருக்கின்றன.
விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அதற்கு எதற்கு தனி அமைச்சு? தனி அமைச்சர்? வேலை செய்ய ஏகப்பட்ட வேலையாட்கள்? பணம் வீண் விரயம் என்பதைக் கூடவா அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை?
கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எடுப்பது மாதிரியும் தெரியவில்லை. எடுப்பார்கள் எனவும் நம்பிக்கையில்லை. என்னடா இது மலேசியர்களுக்கு வந்த சோதனை!
இப்போதெல்லாம் இந்திய. மாமாக் உணவகங்களில் விலையேற்றம் என்பது நாம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துவிட்டது. சொல்லுகின்ற காரணம்: விலைவாசி ஏற்றம். நமக்கும் புரிகிறது. விலையை ஏற்றிவிட்டீர்கள். விலையை ஏற்றிவிட்டு தரத்தைக் குறைத்துவிட்டிர்கள். இட்டிலி சிறிதாக மாறிவிட்டது. மீகொரங் வாங்கினால் ஒரு கீரை கூட கிடையாது.அளவும் குறைந்து போனது. விலையை ஏற்றிவிட்ட பிறகு ஏன் இது போன்ற தரக்குறைவான வேலையைச் செய்கிறார்கள் என்பது இன்றுவரை நமக்குப் புரியவில்லை.
ஒன்று விலையை ஏற்றுங்கள் ஆனால் தரம், அளவு அதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. பழைய நிலையிலேயே இருக்க வேண்டும். தரம், அளவு போன்றவைகளைக் குறைத்தால் விலையேற்றம் தேவை இல்லை. அது தான் தரம் குறைந்துவிட்டதே அப்புறம் ஏன் விலையேற்றம்? ஆனால் இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தரம், அளவு அனைத்தையும் குறைத்துவிட்டு அங்கும் இலாபம் பார்க்கிறீர்கள். விலையையும் ஏற்றி இங்கும் இலாபம் பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் உங்களுக்கும் சேர்த்துத்தான் அந்த நியாயம்!
Sunday, 29 December 2024
அதிகாரம் கொடுத்த தண்டனை!
முப்தி, டத்தோ முகமட் அஸ்ரி ஸைனல் அபிடின், பெர்லிஸ் மாநிலம்
Saturday, 28 December 2024
பயப்படாதே! நானிருக்கேன்!
மின்சாரக் கட்டணம் உயரும் என்று சில நாட்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. செய்தியே நமக்கு அதிர்ச்சி தருவது தான். ஷாக் அடிக்கும் நியுஸ் என்பார்கள்!
Friday, 27 December 2024
தண்டனை நிறைவேற்றப்பட்டது!
திரெங்கானு மாநிலத்தில் ஷரியா நீதிமன்றத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அஃபெண்டி அவாங் இன்று சுமார் 70 பார்வையாளர்களின் முன்னிலையில் பிரம்படி தண்டனை இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அஃபண்டி அவாங், வயது 42, கல்வத் குற்றத்திற்காக ஷரியா நீதிமன்றம் விதித்த தண்டனை ஆறு பிரம்படிகள். அந்தத் தண்டனை பொதுவெளியில் அதாவது பள்ளிவாசலின் வளாகத்தில். சுமார் 70 பேர் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. தண்டனையின் போது - அதாவது பிரம்படியின் போது - அவரது குடும்பம் அங்கிருந்து வெளியேறிவிட்டது.
கொடுக்கப்பட்ட ஆறு பிரம்படிகளும் - மூன்று பிரம்படிகள் முதுகிலும் மூன்று அவரது பிட்டத்திலும் - நிறைவேற்றப்பட்டு அவர் மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லபட்டார். பிரம்படி தண்டனை 2 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டது. அதாவது நண்பகல் 2.50 மணிக்குத் தொடங்கப்பட்டு 2.52 க்கு முடிவடைந்துவிட்டது.
திரெங்கானு மாநிலத்தில் இது போன்று பொதுவெளியில் கல்வத் குற்றத்திற்காக அளிக்கப்பட்ட தண்டனை என்பது இதுவே முதல் முறையாகும்.
பலர் இது போன்ற பொதுவெளி தண்டனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் இது அவசியம் என்கிற கோணத்தில் திரங்கானு அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது.
இனி திரங்கானு மாநிலத்தில் இது போன்ற குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாமும் எதிர்பார்ப்போம்.
Thursday, 26 December 2024
பொதுவெளியில் தண்டனையா?
குற்றவாளிகளைப் பாவபுண்ணியம் பார்க்காமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை.
Wednesday, 25 December 2024
Tuesday, 24 December 2024
பார்த்துப் போங்க சார்!
புத்தாண்டு பிறக்கிறது. புதிய ஆண்டில் பதவி உயர்வு. மக்கள் மனதிலே மகிழ்ச்சி.
எல்லாமே இருக்கட்டும். சொந்த ஊருக்குப் போகும் மகிழ்ச்சியில் கவனத்தைச் சிதறடிக்காதீர்கள். சாலையில் போக்குவரத்து நெரிசல். அதுவும் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள். கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்காதீர்கள்.
வர வர சாலையில் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. சொந்த ஊருக்குப் போகிறபோது இலக்கை அடைய வேண்டியது தான் முக்கிய,ம். நிதானம் முக்கியம். கவனம் தவறினால் மரணம் என்பார்கள். அது நமக்கு வேண்டாம். நல்லதே நடக்க வேண்டும். அதுவே நமக்கும் நமது குடும்பத்துக்கும் நல்லது. ஆசையும், ஆர்வமுமாய் வீடு திரும்புகிறோம் அது நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை.
சாலைகளைப் பயன்படுத்துபவர்கள் பலதரப்பட்டவர்கள். ஒன்று வேகம். இன்னொன்று குடித்துவிட்டு ஓட்டுவது. அது தண்ணியாகவும் இருக்கலாம் அல்லது கஞ்சாவாகவும் இருக்கலாம். போதையில் ஓட்டுபவர்களை யார் என்னதான் செய்ய முடியும்? பெரும்பாலான விபத்துகளுக்கு இவர்கள் தான் காரணம். அதனால் மது அருந்திவிட்டு வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள். அது நடந்துகொண்டு தான் இருக்கிறது. சொன்னாலும் கேட்பதில்லை.
நண்பர்களே! சாலைகளைப் பயப்படுத்துகிறீர்கள். நிதானம் தான் முக்கியம். சேர வேண்டிய இடத்தில் சேர வேண்டியது தான் முக்கியம்.
கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துகள்!
Monday, 23 December 2024
நம்பத்தகாதவர்கள் யார்?
Sunday, 22 December 2024
இது தாத்தாக்களின் காலம்!
Saturday, 21 December 2024
Tik Tok நடவடிக்கை தேவையே!!
மேலவையில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் நல்ல, மிகத்தேவையான கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
Friday, 20 December 2024
பகுத்தறிவு கருத்தரங்கு தேவையா?
வருகிற சனிக்கிழமை (21.12.24) நடைபெறுகின்ற பன்னாட்டுப் பகுத்தறிவு கருத்தரங்கம் .தேவையா என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
தமிழ் நாட்டில் தான் என்னன்னவோ சொல்லி தமிழர்களை வாழ விடாமல் செய்கிறீர்கள் என்றால் இங்கேயும் அதைச் செய்ய வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இந்தப் பகுத்தறிவு சிங்கங்களால் எதுவும் ஆகப்போவதில்லை.
முதலில் தமிழ் நாட்டில் சாதிவெறியை ஒழித்து விட்டீர்களா? சாதியை வளர்த்தவர்களே நீங்கள் தானே. உங்களால் எந்த சாதியை ஒழிக்க முடிந்தது? சாதியை வளர்த்துக் கொண்டே சாதியை ஒழித்து விட்டோம் என்று நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள். சாதியை ஒழித்துவிட்டோம் என்று சொல்லி தமிழ் நாட்டை, தமிழன் கையிலிருந்து அபகரித்துக் கொண்டீர்கள். இன்னும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க வேண்டுமா?
தம்பிகளா! உங்கள் பகுத்தறிவைக் காட்டுவதற்கு தமிழன் தான் அகப்பட்டானா? தமிழனை இளிச்சவாயன் என்றே முடிவுக்கட்டி விட்டீர்களா? ஏன் தெலுங்கர், மலயாளி - இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அங்கே போய் உங்கள் பகுத்தறிவைக் காட்ட வேண்டியது தான? ஏன் நாயுடு, ரெட்டி, நாயர், மேனன் - இவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகளாக மாறிவிட்டார்களா?
இந்தப் பகுத்தறிவு கருத்தரங்கத்திற்கு - தமிழர்களைப் பகுத்தறிவாளர்களாக மாற்ற - எத்தனை நாயுடுகள், ரெட்டிகள், நாயர்கள், மேனன்கள் தமிழ் இனத்திற்குத் தலைமை தாங்க, உலக நாடுகளிலிருந்து வரப்போகிறார்கள்? அதையும் சொல்லிவிடுங்கள்.
உங்களின் பகுத்தறிவால் தமிழ் நாட்டில் தமிழனுக்குத்தான் தலை குனிவு. இங்கே என்ன தான் உங்களுக்கு வேண்டும்? பொருளியல் முன்னேற்றம் தான் எங்களுக்குத் தேவை. அதனைத் தமிழ் நாட்டில் உங்களால் கொடுக்க முடியவில்லை. இங்கே முடியுமா?
Thursday, 19 December 2024
இப்படியும் ஒரு நம்பிக்கையா!
Wednesday, 18 December 2024
சரியான அபராதம் தான்!
அவர்கள் துன்புறுத்தாத மிருகங்களே கிடையாது. அட! இந்த பூனைகள் அப்படி என்ன தான் செய்துவிட்டன? அவைகள் மனிதர்களுடன் விளையாடும் தன்மை கொண்டவை. நன்கு பழக்கப்படுத்தினால் பூனைகள் மனிதருடன் கொஞ்சம், கெஞ்சும் எல்லாமே செய்யும்.
அப்படிப்பட்ட தன்மை கொண்ட பூனைகள் எப்படியெல்லாம் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றன என்று பாருங்கள். மேலே படத்தைப் பாருங்கள். ஒரு மனிதர் - மனிதர் என்று சொல்லவே அருகதையற்றவர் - அந்தப் பூனையை கழுத்தில், கட்டி, தரையோசு தரையாக இழுத்துக் கொண்டு போவதைப் பார்க்கும் போது மனம் கசிந்து போகிறது.
இது போன்ற ஜென்மங்கள் எல்லாம் பூனை வளர்க்க வேண்டும் என்று யார் கட்டாயப்படுத்தினார்கள்? அது பூனை தான். ஆனால் அது துன்புறுவதைப் பார்த்து நாம் என்ன சந்தோஷப்பட முடியுமா? அது மிருகம் தான். ஆனால் வலி என்பது அதுக்கும் இருக்கத்தானே செய்யும்?
ஒன்று மட்டும் உறுதி. . இங்கு ஹீரோ என்றால் அது நீதிமன்றம் தான். பாராட்டலாம். இனி யாரும் செய்யத் தயங்கும் அளவுக்குத் தண்டனைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆமாம், தண்டனையாக ரிங்கிட் 10,000 வெள்ளி அபராதம் செலுத்தும்படி நீதிமன்றம் கட்டளையிட்டிருக்கிறது. 10,000 வெள்ளி என்பது பெரிய தொகை தானே? இது போன்று அபராதத்தை மிகைப்படுத்தினால் இனி யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் இது பூனைக்கு மட்டும் என்பதாக இருக்கக் கூடாது நாய்களுக்கும் சேர்த்துத்தான் தண்டனைகள் இருக்க வேண்டும்.
வேறுவழி இல்லை. ஒவ்வொன்றையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். தண்டனை, அபராதம் எல்லாம் கடுமையாக இல்லையென்றால் அவனவன் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வான்.
இனி மேலாவது பிராணிகள் துன்புறுத்துவது குறைகிறதா என்று பார்ப்போம்
Tuesday, 17 December 2024
எனக்குச் சம்பளம் வேண்டாம்!
மற்றபடி வேறு எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் சம்பளம் இல்லாமல் நாங்கள் வேலை செய்யத்தயார் என்று சொல்ல முன்வரவில்லை. அதற்கான பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மலேசியர்களில் பலர் ஒவ்வொரு மாதமும் வாங்கிய பல்வேறு பொருள்களுக்கு மாதாமாதம் மாதத்தவணை கட்டுபவர்களாகத்தான் இருக்கிறோம். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்கள் மட்டும் வேறு விதமாகவா வாழப் போகிறார்கள்?
Monday, 16 December 2024
அப்பாடா! கொஞ்சம் ஆறுதலடையலாம்!
Sunday, 15 December 2024
இது சுற்றுலா! இன விவகாரம் அல்ல!
Saturday, 14 December 2024
சிறையிலிருந்தே பி.எச்.டி. பட்டம் பெற்றார்!
எத்தனையோ ஆண்டுகளாக, அதாவது வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே, நாட்டில் சிறைகள் உள்ளன. ஆனால் இத்தனை ஆண்டுகாலம் இல்லாத சிறப்பு சிறைக்கைதி ஒருவருக்கு இந்த ஆண்டு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
14 வயதில் செய்த ஒரு கொலை குற்றத்திற்காக போதை பித்தர்களுக்கான காஜாங் சிறைசாலையின் மறுவாழ்வு மையத்தில் கடந்த 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த வந்த முராட் என்னும் அந்தக் கைதி இன்று விடுதலை செய்யப்பட்டார். சிலாங்கூர் சுல்தானின் பிறந்த நாளன்று அரச மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலையானார்.
சிறையில் இருந்த காலத்தில் அவரின் சாதனை தான் என்ன? அவர் சிறையில் இருந்தவாரே முதலில் எஸ்.பி.எம்., டிப்ளோமா கல்வி, இளங்கலை, முதுகலை முடித்த பின்னர் பி.எச்.டி. என்னும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. சிறையில் இருந்து கொண்டே பல ஆண்டுகள் கல்வி மீதான உழைப்பைப் போட்டு அதன் மூலம் இத்தகைய சாதனையை அவர் புரிந்திருக்கிறார். கொலைக் குற்றச்சாட்டு அவர் மீது இருந்தாலும் அவர் கல்வி பயில, திருந்தி வாழ, சிறைத்துறையும் அவருக்கு நல்ல ஒத்துழப்பைக் கொடுத்து அவரை இப்படி ஒரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நல்ல முயற்சி. பாராட்டத்தான் வேண்டும்.
மலேசிய சிறை வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்திருப்பது இதுவே முதல் முறை. குறைவான அளவில் ஓரிருவர் கற்றிருக்கலாம் ஆனால் முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு யாரும் முனைப்புக் காட்டியதில்லை. அந்த வகையில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டவர் இந்த மனிதர் முராட் ஆகத்தான் இருக்க முடியும்.
சின்னஞ்சிறு வயதில் இப்படி ஒரு சூழலில் சிக்கிக்கொண்ட முராட் அதனையே மாற்றி சாதனையாளராக தன்னை மாற்றிக் கொண்டார் என்பது பெருமைக்குரிய செயல் என்பதில் சந்தேகமில்லை.
இதில் நமக்குக் கிடைக்கும் பாடம் தான் என்ன? எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும் கல்வி ஒன்று தான் நமது ஆயுதம். கல்வி இருந்தால் பல கதவுகள் நமக்காகத் திறக்கும். அதில் பெண் கல்வி இன்னும் முக்கியம். ஒரு குடும்பத்தின் அடுத்தக்கட்ட உயர்வுக்குக் கல்வியில் பெணகளின் பங்கு என்பது மிகவும் முக்கியம்.
இதோ முராட் சிறைக்கதவுகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு வெளியே வந்துவிட்டார். அதற்குச் சிறையில் இருந்து கொண்டே அவர் பெற்ற கல்வி தான் வழிவகுத்தது! வாழ்க வளமுடன்!
Friday, 13 December 2024
முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை!
குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை என்றால் ஏற்கனவே அவர்கள் தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும். அதெப்படி அவர்களுக்குத் தெரியாமல் போகும்? அதற்குத்தானே கல்வி அமைச்சு என்று ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது?
இன்று பற்றாக்குறை என்றால் அன்று அவர்கள் வேலையை அவர்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்று பொருள். அதுமட்டும் அல்ல. அவர்கள் வேலை என்னவேன்றே தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது.
பொதுவாகவே அரசு ஊழியர்களுக்கு அவர்கள் வேலை என்ன என்பதே அவர்களுக்குத் தெரியாமல் இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அரசாங்கத்தில் ஏதாவது வேலை ஆகவேண்டுமானால் அது உடனடியாக நடக்கக்கூடிய வாய்ப்பே இல்லை. இது சரியில்லை அது சரியில்லை என்று இழுத்தடிக்கும் போக்கு அதிகளவில் உள்ளது. அதற்குக் காரணம் அவர்களுக்கே அந்த வேலை தெரியாத போது அதனை அவர்கள் மக்கள் பக்கம் திருப்பி விடுகின்றனர்!
ஆனால் கல்வி அமைச்சு நிலைமை அப்படியல்ல. மக்களுடனான தொடர்பு அவர்களுக்குக் குறைவு. கல்வி அமைச்சர் இது போன்ற செய்திகளை - ஆசிரியர் பாற்றாகுறை - முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை - என்று சொல்லுவதே மிகக் கேவலமான செயல். அப்படியென்றால் கல்வி அமைச்சுக்கு ஏன் அத்தனை பணியாட்கள் என்று தான் கேட்க வேண்டியுள்ளது.
ஒன்று மட்டும் உறுதி. அரசாங்கம் தனது பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே சரியில்லை என்பதில் கொஞ்சமேனும் ஐயமில்லை. அதனால் தான் இத்தனை குளறுபடிகள்! அரைகுறை படிப்பு எல்லாவகையிலும் மக்களைப் பாதிக்கிறது. அரைகுறை படிப்பு அரசியல்வாதிகளைத் தான் உருவாக்க முடியும். திறமையாளர்களை உருவாக்க முடியாது. குறிப்பாக தகுதிப்பெற்ற ஆசிரியர்களை உருவாக்க முடியாது.
என்ன செய்ய? காலத்தின் கோலம் என்பதைத்தவிர சொல்ல வேறொன்றுமில்லை!
Thursday, 12 December 2024
அரச மாநகரில் தூய்மைக்கேடா?
Wednesday, 11 December 2024
வங்காள தேசத்தில் என்னதான் நடக்கிறது?
Tuesday, 10 December 2024
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Monday, 9 December 2024
இதுதான் மடானி அரசாங்கத்தின் கொள்கையா?
Sunday, 8 December 2024
MyKad தரவுகள் திருடப்பட்டனவா?
Saturday, 7 December 2024
வெள்ளிக்கிழமை தொழுகைகளிலுமா?
Friday, 6 December 2024
எகிறிய காய்கறி விலைகள்!
யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஒருபக்கம் பற்றாக்குறை என்றால் இன்னொரு பக்கம் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் என்பது உள்ளே புகுந்து விடுகிறது! எதுவும் புதிதல்ல. நாம் எல்லாவற்றுக்கும் பழக்கப்படுத்திக் கொண்டோம். வேறு வழியில்லை.
அப்போது தான் ஒரு சிலருக்குப் போதிமரத்து ஞாபகம் வரும். வீட்டு முன் இரண்டு மூன்று காய்கறி செடிகளை நட்டுவைத்திருந்தால் கூட இந்த நேரத்தில் நமக்கு உதவுமே என்று! நாம் எப்போதும் இப்படித்தான். இருக்கும் போது சட்டை செய்வதில்லை இல்லாத போது நாலாப்பக்கமும் கண்கள் அலையும்! சொல்லிப் பயனில்லை. இப்படியே நாம் பழக்கப்படுத்திக் கொண்டோம்.
எந்தக் காலத்திலும், இது போன்ற நேரங்களில், நாம் பாடம் படிப்பதில்லை. கையில் காசு இருக்கும் போது படோடாபம் காட்டுவதும் காசு இல்லாத போது அரசாங்கத்தைக் குறை சொல்லுவதும் நமக்குப் பழக்கமான ஒன்று! நடப்பவை இயற்கைப் பேரிடர். யார் என்ன செய்ய முடியும்? நாம் தான், குறைந்தபட்சம், கொஞ்சமாவது, தயார் நிலையில் இருக்க வேண்டும்.
என்ன செய்யலாம்? வழக்கம் போல எல்லாரும் சொல்வது தான். இட வசதி இருந்தால் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சில காய்கறிகளை நட்டு வையுங்கள். கஷ்ட நேரத்தில் அந்த செடிகள் நமக்குக் காய்கறிகளைக் கொடுத்து உதவும். பிரமாண்ட காய்கறித் தோட்டமாக இல்லையென்றாலும் உங்கள் வீட்டுக்குத் தேவையான ஓரளவு காய்கறிகளை அது ஈடுசெய்யும்.
அரசாங்கத்தைக் குறை கூறுவதில் பயனில்லை. யாரும் உதவப்போவதில்லை. நம் கையே நமக்கு உதவி. பிறர் கையை எதிர்பார்க்காதே என்பது தான் அதன் பொருள். விலைவாசி ஏற்றம் எல்லாரையும் தான் பாதிக்கிறது. நம்மை மட்டும் அல்ல. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையைச் செய்யத்தான் செய்கிறது. நம் பங்குக்கு நாம் என்ன செய்கிறோம்? நம் கடமையை நாம் செய்ய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் வழிகள் உண்டு. குறைகளையே சொல்லிக் கொண்டிருக்காமல் நாம் என்ன செய்ய முடியும் என்பதை யோசியுப்கள்.
Thursday, 5 December 2024
யார் தருவார் இந்த அரியாசனம்?
Wednesday, 4 December 2024
இது தான் சில்லறைத்தனம் என்பது!
பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி வெளிநாடு போவதற்குத் தடை செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு முந்தைய வாரம் தான் அவர் தாய்லாந்து போய் வந்திருக்கிறார். அப்போது எந்தத் தடையும் அவருக்கு இருக்கவில்லை. அப்போது எந்தக் குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்படவில்லை.
Tuesday, 3 December 2024
ஏன் இந்தப் பற்றாக்குறை?
வேறு துறைகளில் பற்றாக்குறைகள் வரலாம். ஆனால் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை எப்படி வரமுடியும் என்பது நமக்குப் புரியவில்லை.
அதற்குத்தான் கலவி அமைச்சு என்று ஒன்று இருந்துகொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் பள்ளி சம்பந்தமான அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஆசிரியர்கள் ஒய்வு பெறும் வயதை எட்டிவிட்டார்கள் அல்லது சீக்கிரமாகவே ஒய்வு பெற விண்ணப்பங்கள் செய்திருக்கிறார்கள் அல்லது நோயின் காரணமாக வேலையை விடுகிறார்கள் போன்ற அனைத்து விஷயங்களும் கல்வி அமைச்சுக்கு அத்துப்படி. காலியாகும் இடங்களை உடனடியாகப் பூர்த்தி செய்வது கலவி அமைச்சின் முக்கிய கடமை.
இது போன்ற காலியாகும் இடங்களுக்கு ஆசிரியர்களைத் தயார் செய்வது கல்வி அமைச்சின் கையில் உள்ளது. கல்வி அமைச்சர் இந்த ஆண்டு இதுவரை சுமார் 14,000 ஆசிரியர் பணியில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமோ ஆசிரியர் பணிக்குச் சுமார் 20,000 காலி இடங்கள் இருப்பதாகக் கூறுகிறது.
எது சரி, எது தவறு என்று பொது மக்களுக்குத் தெரிய நியாயமில்லை. கல்வி அமைச்சு சொல்வது உண்மை என நாம் எடுத்துக் கொள்கிறோம். நம்முடைய கவலை எல்லாம் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பது மட்டும் தான்.
இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். காலியாக இருக்கும் இடங்களில் தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதைவிட பயிற்சி பெறாத தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் போக்கும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கல்வித்தரம் குறையுமோ என்கிற அச்சமும் நமக்கு உண்டு. ஆனாலும் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க பயிற்சி பெறாத தற்காலிக ஆசிரியர்கள் தான் கை கொடுக்கின்றனர் என்பதையும் மறந்துவிட முடியாது.
பற்றாக்குறைக்குக் கல்வி அமைச்சு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். கல்வித்துறையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்துக்கும் கல்வி அமைச்சு தான் பதில் சொல்ல வேண்டும்.
எப்படியோ நல்லதே நடக்கட்டும்!
Monday, 2 December 2024
இனி குப்பைகளைப் பார்த்துக் கொட்டுங்கள்!
இனி குப்பைகளைப் பார்த்துக் கொட்டுங்கள்! வருங்காலம், சென்றகாலம் போல் இருக்கப்போவதில்லை.
எங்கே வேண்டுமானாலும் குப்பைகளைக் கொட்டலாம், கேட்பார் யாருமில்லை, நான் செய்வதைச் செய்வேன், எவன் கேட்பது?, போன்ற திமிரான பேச்சுக்களைப் பேசாமல், திமிராக நடந்து கொள்ளாமல், காரில் போகும் போது குப்பைகளைச் சும்மா தூக்கி எறிந்துவிட்டுச் செல்வேன் என்கிற நினைப்பையெல்லாம் ஒரு பக்கம் மூட்டைக்கட்டி வையுங்கள்.
வரப்போகிறது சட்டம். நமக்கு அது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. என்றாலும் வருவதற்கு முன் இப்போதே உங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள். பணத்தைக் கொடுத்து எதனையும் சாதித்து விடலாம் என்கிற எண்ணத்தை இப்போதே கைவிடுங்கள். காரணம் இந்த முறை இது கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும்.
காரில் போகும் போது எதையோ தின்றுவிட்டு, பாதி சாப்பிட்டும் பாதி சாப்பிடாமலும் அதனை அப்படியே சாலைகளில் தூக்கி எறிவதும், சாலைகளை ஏதோ குப்பைத் தொட்டிகளைப் போல பயன்படுத்துவதும் அதை எப்படி பார்த்துக் கொண்டே இருப்பது? மேல்நாடுகளில் இப்படி, அப்படி என்று கதை அளப்பவர்கள் இங்கே வந்த பிறகு ஏன் அதனை இங்கே செயல்படுத்த முடிவதில்லை?
நாம் எல்லாவற்றிலும் அலட்சியம் காட்டுகிறோம். குப்பைகளை அதற்கானத் தொட்டிகளில் கூடவா போட அலட்சியம்? வீடுகளில் குப்பை வேண்டாம் என்று நினைத்து, கடைப்பிடிப்பது நல்ல செயல் அதே போல வீட்டுக்கு வெளியேயும் கடைப்பிடிப்பதும் கட்டாயம். அது பொது மக்களின் நலனுக்காக. நாய், பூனை,பறவைகள் நலனுக்காக. எல்லாமே ஒன்றுக்கொன்று சேர்ந்து தான் வாழ வேண்டியிருக்கிறது.
எப்படியோ சட்டம் வரப்போகிறது. தண்டனை என்பது சமூக சேவை என்கிறார்கள். அது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சட்டம் நடைமுறைக்கு வரும் போது தான் தெரியவரும். அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு எதுவும் சலுகைகள் இருக்கின்றனவா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குப்பைகள் இல்லா சாலைகளை இனி பார்க்கலாம். நம்புங்கள்.
Sunday, 1 December 2024
அதிலென்ன தரக்குறைவு?
சமீபத்தில் நடைப்பெற்ற வழக்கு ஒன்றில் கச்சாங் பூத்தே இன்னும் பிரபலமாகி விட்டது. அதன் கதாநாயகன் டாக்டர் மகாதீர். கச்சாங் புத்தே என்றால் சாலை ஓரங்களில் விற்கப்படும் ஏதோ ஓர் அற்ப உணவுப் பொருள் என்பது போல அவர் குறிப்பிட்டிருந்தார்.
லச்சாங் புத்தே எந்த சாலை ஓரங்களில் விற்கப்படுகிறது? அவர் வாழும் பகுதிகளில் சாலை ஓராங்களில் விற்பதை அவர் பார்த்திருக்கிறாரா? நாசி லெமாக் சாலை ஓரங்களில் விற்கப்படுகிறது என்றால் நம்புவார்கள். அதனை நான் தரக்குறைவாக நினைக்கவில்லை. எனது பள்ளிக்காலத்தில் நாசி லெமாக்கை அரை காசுக்கு வாங்கிச் சாப்பிட்டவன் நான். வீடு போய் சேரும் வரை அது தாங்கும்.
ஆனால் டாக்டர் மகாதிர் எப்போதுமே கோணல் புத்தி உள்ளவர். அவர் ஓர் இந்திய வம்சாவளி என்பதை மறந்து இந்தியர்களைக் கேவலமாகக் கருதுபவர். அப்போது தான் மலாய் சமூகம் அவரை மதிக்குமாம்! குட்டி என்றால் அவருக்குக் கோபம் வருகிறது., ஆனால் இந்தியர்களை அவர் எப்படி வேண்டுமானாலும் பேசுவார். 'கிளிங். என்ற சொல்லை இவரே பலமுறைப் பயன்படுத்தி மற்ற மலாய்க்காரர்களுக்கு வழிகாட்டியாய் இருந்திருக்கிறார். என்ன தான் அவர் குட்டிக்கரணம் போட்டாலும் அவருடைய 'குட்டி' அடையாளம் எந்தக் காலத்திலும் போகாது என்பது நிச்சயம். அவர் இந்தியர் என்பதை அவருடைய அந்தக்கால அடையாளக்கார்டு காட்டிக்கொடுக்கிறது. அவர் ஓர் இந்தியர் என்கிற அடையாளத்தில் தான் பலகலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவர்.
அவர் கேவலமாகக் குறிப்பிட்டாரே அந்த கச்சாங் பூத்தே இன்று உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது அவருக்குத் தெரியவில்லை என்றால் அவருக்கு நெருங்கியவர்கள் தெரியப்படுத்துங்கள். எந்த வியாபாரமாக இருந்தாலும் அதில் சிறுமை இல்லை. சீனர்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சிறு, குறு, பிரமாண்ட அத்தனை வியாபாரங்களும் சீனர்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் அவர்கள் கையில்.
இன்று நாங்கள் கச்சாங் பூத்தே விற்கலாம். அல்லது நாசி லெமாக் விற்கலாம், பூ வியாபாரம் செய்யலாம்.. ஒன்றை மறந்து விடாதீர்கள். நாளையப் பொருளாதாரம் எங்கள் கையில்!