Saturday, 28 December 2024

பயப்படாதே! நானிருக்கேன்!

 

மின்சாரக் கட்டணம் உயரும் என்று சில நாட்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.  செய்தியே நமக்கு அதிர்ச்சி தருவது தான். ஷாக் அடிக்கும்  நியுஸ் என்பார்கள்!

ஆனாலும் பிரதமர் அன்வார் "பயப்பாடாதீர்கள்!  நானிருக்கிறேன்!" என்று  நமது தற்காப்புக்காககக் களம் இறங்கியிருக்கிறார். 

"மின்கட்டணம் உயரட்டும். ஆனால் அது ஏழை மக்களை எந்த வகையிலும்  பாதிக்காத வண்ணம் நாங்கள் பார்த்துக் கொள்வோம்"  என்பது தான் பிரதமர் கொடுக்கும் மக்களுக்கான செய்தி.  முடிந்தவரை அது பணக்காரர்களுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும்  ஒரு வேளை அது உயர்த்தப்படலாம்.  சாதாரண ஏழை மக்கள் அது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்கிறார் பிரதமர்

நமக்கும் சில சந்தேகங்கள் உண்டு. பெரும் நிறுவனங்களுக்கு ஏற்றுவது சரிதான் என்றாலும்  அவர்களே அந்தச் சுமைகளை எத்தனை நாளைக்குத்தான் தாங்குவார்கள்?  அவர்கள் அதனை மக்களிடம் தானே கொண்டுவந்து  சேர்ப்பார்கள்?   அது மின்கட்டண உயர்வு என்கிற பெயரில் வராமல்  அது பொருட்களின் விலை உயர்வு என்கிற பெயரில்  வரத்தானே  செய்யும்? 

இப்படி விலை உயரும் போது  அதனை எப்படி பிரதமர்  சமாளிக்கப் போகிறார்?    மின்சாரக்கட்டணத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம். அதனை  உயர்த்தலாம் குறைக்கலாம்.  அது உங்கள் வீட்டுச் செல்லக்குட்டி மாதிரி!  ஆனால் விலைவாசி உயர்வை எப்படிக் கட்டுப்படுத்துவீர்கள்?   நீங்கள் சொல்லுவதை  எந்த வியாபாரியும் கேட்கப் போவதில்லை.  பதுக்குற வேலை ஒதுக்குற வேலை எல்லாமே நடக்கும்! அப்போதும் இந்த ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

இப்போதைக்கு நம்மால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது.  ஏதோ பிரதமர் சொல்லுகிறார். கேட்க சந்தோஷம் தான்.  ஆனால்  எப்போதும் இது சந்தோஷத்தைக்  கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நீங்கள் இருக்கும் போது நாங்கள்  ஏன் பயப்படப் போகிறோம்?

No comments:

Post a Comment